தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக சாம்சங் தொழிலாளர் போராட்ட நிதியாக ரூ.4.66 லட்சத்தை சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு ஆகியோரிடம் சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்தில் அக்டோபர் 23 அன்று வழங்கினர். இதில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் மயில், மாநிலத் தலைவர் மணிமேகலை, பொருளாளர் கணேசன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிஐடியு மாநில நிர்வாகிகள் வி. குமார், எம். சந்திரன், பி.சுந்தரராஜன், கா.சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.