states

img

512 கிலோ வெங்காயத்திற்கு கிடைத்த விலை வெறும் 2 ரூபாய்

மும்பை, பிப். 25 - மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் மாவட்டம், பர்ஷி தாலுகாவிலுள்ள  போர்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர துக்காராம் சவான் (58). விவசாயி ஆவார். இவர் தனது நிலத்தில் அறுவடை செய்த 512 கிலோ  வெங்காயத்தை எடுத்துக் கொண்டு 70 கி.மீ. தூரத்தில் உள்ள சோலாப்  மண்டிக்கு (வேளாண் விளைபொருட் கள் மார்க்கெட் கமிட்டி) சென்றுள்ளார். அங்கு அவரது வெங்காயத்திற்கு, கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ராஜேந்திர துக்காராம் சவானும், வேறு வழியில்லாமல் 1 ரூபாய் விலைக்கே வெங்காயத்தை விற்றுள்ளார். எனினும், பல்வேறு கழிவுகள் போக இறுதியாக அவரது கணக்கில் 2 ரூபாய் 49 காசுகள் மட்டுமே பற்று வைக்கப்பட்டுள்ளது. அதிலும் கூட, காசோலைக்காக 49 காசுகளை கழித்துவிட்டு 2 ரூபாயை மட்டுமே குறிப்பிட்டு காசோலை வழங்க ப்பட்டுள்ளது. இந்த 2 ரூபாயையும் அவர் 15 நாட்கள் கழித்துதான் வங்கி யில் இருந்து பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதைக்கேட்ட விவசாயி ராஜேந்திர துக்காராம் சவானுக்கு ரத்தக் கண்ணீர் வராத குறைதான். மிகவும் மனம் உடைந்து போன அவர், “விதை களின் விலை, உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் விலை எல்லாம் கடந்த 4 ஆண்டுகளாக இரண்டு மடங்காகி விட்டது. 500 கிலோ வெங்காயத்தை விளைவிக்க நான் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்தேன்.

ஆனால், எனக்கு கிடைத்ததோ வெறும் 2 ரூபாய்” என்று புலம்பித் தவித்துள்ளார். “ஒரு கிலோ வெங்காயத்தை ஒரு  ரூபாய்க்கு விலை பேசினார்கள். அதன் படி மொத்தம் 512 ரூபாய் வந்தது. அதில்,  வெங்காயத்தை ஏற்றி வந்த வாகனக் கட்டணம், வெங்காயத்தை வாகனத் தில் இருந்து கீழே இறக்கிய கட்டணம், எடை போட்டதற்கான கட்டணம், மண்டி கமிஷன் என எல்லாவற்றையும் சேர்த்து மண்டி வர்த்தகர் ரூ. 509 ரூபாய் 50 காசு களைக் கழித்து விட்டார். மீதியிருந்த 2 ரூபாய்க்கு காசோலை வழங்கப் பட்டது. இந்த காசோலையும் மார்ச் மாதத் தேதியிட்டு 15 நாட்களுக்குப் பிறகு எடுக்கும் வகையில் வழங்கப் பட்டுள்ளது” என கண்ணீர் சிந்தி யுள்ளார். 512 கிலோ வெங்காயம் வெறும் 2 ரூபாய்க்கு விலைபோன சம்பவம் நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தி யுள்ளது. வேளாண் விளைபொருட்க ளுக்கு அதன் உற்பத்தி மதிப்பைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு கூடுதல் விலை வழங்குவேன் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும் ராஜேந்திர துக்காராம் சவானின் நிலையில்தான் இந்திய விவசாயிகள் உள்ளனர் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக் களை பதிவிட்டு வருகின்றனர்.