சென்னை, செப்.3- இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சிபுரிந்து சுரண்டிய பிரிட்டிஷா ருக்கு மன்னிப்புக்கடிதம் எழுதி சிறை யிலிருந்து விடுவிக்கப்பட்ட சாவர்க் கர் பெயரை பள்ளிப் பாடப்புத்தகத்தி லிருந்து நீக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு அரசை வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசால் 2019 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இந் திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் மன்னிப்பு கடித நாயகன் சாவர்க்கரை வரலாற்று ஆசிரியர் என்று எழுதியி ருப்பதை இந்திய மாணவர் சங்கம் வன் மையாகக் கண்டிக்கிறது. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு இந்தியா முழுமைக்கும் தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரால் பாடப்புத்தகங்களில் வரலாற்றை மாற் றியமைப்பதும் காவிமயத்தை புகுத்து வதும் தொடர்ந்து செய்து வருகிறது. அதன் வெளிப்பாடாக கர்நாடக பாடத் திட்டத்தில் புல்புல் பறவையில் அந்த மான் சிறையிலிருந்து சாவர்க்கர் பறந் தார் என்று அறிவியலுக்கு புறம்பான கருத்தை புகுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த அதிமுக அரசை பயன்படுத்தி பாடநூல் கழகம் மூலமாக தமிழகத்தி லும் இத்தகைய காவிவாத கருத்து களை புகுத்தியுள்ளது. திமுக ஆட்சி அமைத்து ஓராண்டாகி யும் இதுபோன்ற விஷயங்களை கலை யாமலிருப்பது ஏற்புடையதல்ல. சமூக நீதி அரசில் சாவர்க்கர் பெயர் இடம்பெறலாமா?இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஐந்து முறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து பிரிட்டிஷ் அரசிடம் 60 ரூபாய் ஓய்வூதியம் வாங்கி வகுப்புவாத சிந்தனைகளை வளர்த்த வர் பாடப்புத்தகத்தில் இடம்பெறுவதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?. உட னடியாக தமிழக அரசு பாடநூல் கழ கம் மூலம் பாடநூல்களை மறு பரி சீலனை செய்து வரலாற்று நூலில் உள்ள தவறுகளை நீக்கம் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.