states

பாலமேடு ஜல்லிக்கட்டு 14 காளைகளை அடக்கிய பொதும்பு இளைஞர்

உலகப்புகழ் பெற்ற மதுரை பால மேடு ஜல்லிக்கட்டு  ஜனவரி 16  செவ்வாயன்று மஞ்சமலை ஆற்  றுத்திடலில் அமைக்கப்பட்ட வாடிவாச லில் நடைபெற்றது. பாலமேடு கிராம பொது மகாலிங்க மடத்துக் கமிட்டி மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் இணைந்து  நடத்திய இப்போட்டியில் மாவட்ட ஆட்சி யர் மா.சௌ.சங்கீதா தலைமையில் மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். வணிக வரி- பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார்.  3677 காளைகளும் 1412 மாடுபிடி வீரர் களும் பதிவு செய்திருந்தனர். இவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு தேர்வானவர்கள் 1 மணி நேரத்திற்கு 50 பேர் வீதம் ஒவ்வொரு போட்டிக்கும்  அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 840 காளைகள் அவிழ்க்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்று காளை களைப் பிடிக்கும் வீரருக்கும் பிடிபடா மல் செல்லும் காளையின் உரிமையாள ருக்கும் அண்டா, தங்க நாணயம், மின்  விசிறி, ஹெல்மெட், சைக்கிள், பீரோ, மெத்தை, சேர் உள்ளிட்ட பரிசுப் பொருட்  கள் வழங்கப்பட்டன. இதில் புதுக்கோட்டை ராக்கெட் சின்  னக்கருப்புக்கு முதலமைச்சர் சார்பாக சிறந்த காளைக்கான கார் பரிசாக வழங்  கப்பட்டது. 14 காளைகளை அடக்கிய மதுரை பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபா கரனுக்கு தமிழக இளைஞர் நலன் -விளை யாட்டு  மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சார்பாக கார் பரிசாக வழங் கப்பட்டது. இவர் 2020, 2022, 2024 என  மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இரண்டாம் பரிசு வென்ற காளையின்  உரிமையாளர் கோட்டூர் அமர்நாத்க்கு கன்றுடன் நாட்டுப் பசு மாடு மற்றும்  சிறந்த மாடுபிடி வீரராக இரண்டாமி டத்தைப் பிடித்த மதுரை, சின்னப்பட்டி தமிழரசனுக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் சார்பாக  மோட்டார் பைக்கை பரிசாக அமைச்சர் பி. மூர்த்தி வழங்கினார். தமிழரசன் கடந் தாண்டு முதலிடம் பிடித்தவர் ஆவார்.  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் கள் ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன், திரைப்பட நடிகர் சூரி, மாவட்டகாவல் கண்காணிப்பாளர்கள் சிவ பிரசாத், டோங்ரே பிரவீன் உமேஷ் பங்கேற்றனர்.