சென்னை,நவ.14- டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக் கெடுப்பு பணிகளை வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் மேற்கொள்ளாமல், வரு வாய்த்துறை மூலம் மேற் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டங்களை வகுப்பதற்காகவும், விளை நிலங்களின் தன்மைகள், சாகுபடி நடைபெறும் பயிர் வகைகள், சாகுபடி நடைபெறும் பரப்பளவு மற்றும் விளைச்சல், விவசாயிகள் வருமானம், பயிர் காப்பீடு, கடன் உள்ளிட்ட விப ரங்களை தொகுத்து டிஜிட்டல் முறையாக மாற்ற வேண்டு மென்று ஒன்றிய அரசு 2023 இல் அறிவித்தது. அதன்படி பல மாநிலங்களில் அந்த பணிகள் முடிந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் தற்போது வேளாண் கல்லூரி மாண வர்களை பயன்படுத்தி இப்பணி களை மாநில அரசு மேற் கொண்டு வருவது பொருத்தமற்ற தாகும். இது குறித்த எந்த முன் அனுபவமும் இல்லாத கல்லூரி மாணவர்களை 22 நாட்கள் கட்டாயம் இப்பணிகளில் ஈடுபட வேண்டுமென நிர்ப்பந்திப்பது சரியான நடவடிக்கையில்லை. மேலும் சரியான முறையில் விபரங்களை தொகுப்பதற்கு மாநில வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை, புள்ளி யியல் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களைத்தான் ஈடு படுத்த வேண்டும். வழக்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்தி லும் அந்த கிராமத்தில் உள்ள மொத்த நிலம், அதில் எவ்வளவு சாகுபடி, எந்தெந்த பயிர் சாகு படி நடைபெற்றுள்ளது என்ப தெல்லாம் அந்த வருவாய் கிராம அலுவலருக்குத்தான் தெரியும். எனவே, ஒன்றிய அரசு கேட்டுள்ள விபரங்களை தொகுத்து அளிப்பதற்கான பணிகளை கிராம நிர்வாக அலு வலர்கள் மூலம் செய்வதுதான் சரியான விபரங்களை தர முடியும். அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுத்து இப்பணிகளை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிகளை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் எந்த விதமான வசதிகள் செய்து தராமல் தமிழ்நாடு வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பல்கலைக்கழக ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக இந்த பணிகளை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது வேளாண் கல்லூரி களில் 70 முதல் 75 சதவீதம் வரை அதிக அளவில் மாணவிகளே பயின்று வருகின்றனர். அவர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் போதிய தங்கும் இடங்கள் கழிப்பிட வசதிகள் மருத்துவ வசதிகள் இல்லாமல் இந்த சர்வே பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலையில் துவங்கி மாலையில் முடியும் சர்வேக்கு போதிய போக்குவரத்து மற்றும் உணவு வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. அவர்கள் பெற்றோர்களிடம் ஒப்புதல் பெறாமலும் அவர்களிடம் தெரிவிக்காமலும் இந்த பணிகளை மேற்கொள்ள மாணவிகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்று மிரட்டப்படுகின்றனர். இந்த தவறான செயல்பாடுகள் காரணமாக சில இடங்களில் குறிப்பாக வனப்பகுதிகளில் மிருகங்களின் தாக்குதலுக்கும் இலக்காகும் சூழல் நிலவுகிறது. வேளாண் மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு குறிப்பாக வேளாண் மாணவிகள் நலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த பயிர் கணக்கீடு பணிகளை வேளாண் கல்லூரி மாணவர் ஆசிரியர்கள் ஊழியர்களை வைத்து நடத்துவதை நிறுத்த வேண்டும். பிற மாநிலங்களை போல் வருவாய்த்துறை அல்லது பிற வளர்ச்சித் துறைகளை இணைத்து நடத்திட வேண்டும். வேளாண் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் கல்வி சுற்றுலாவின் போது கடந்த அதிமுக ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் எரிக்கப்பட்டதைப் போன்று பெரும் விபத்துகள், இயற்கைச் சீற்றங்களில் இருந்து மாணவர்களை காக்க மாணவர்களை கொண்டு மேற்கொள்ளப்படும் இக் கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்தவேண்டும்.