சென்னை, செப். 3- விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவரை கவனிக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் தெரி வித்துள்ளது. நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்த 11ஆம் வகுப்பு மாணவர் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சக மாணவர்கள் தகாத முறையில் பேசிய தாலும், தாளாளர் மற்ற மாணவர்கள் முன்பு அடித்ததாலும், மோகன் ராஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நாமக்கல் சிபிசிஐடி காவல் துறையினர் விசார ணைக்கு பின், தற்கொலை எனக் கூறி, வழக்கை முடித்துவைக்க நாமக்கல் நீதி மன்றத்தில்அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையை நிராகரித்த நாமக்கல் நீதி மன்றம், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தாளாளரை நேரில் ஆஜராக உத்தர விட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பள்ளி தாளாளர் தங்கவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தி ருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல் குமார் பிறப்பித்த உத்தரவில், விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவரை கவனிக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை என்றும், சக மாணவர்கள் பிரச்சனை செய்வது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் அதை தீவிர மாக கருதவில்லை எனச் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த வழக்கை காவல் துறை யினரும் மிக சாதாரணமாக கையாண்டுள் ளதாகவும் நீதிபதி சாடினார்.