states

60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புக!

சென்னை, ஜூன் 22 - 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வியாழனன்று (ஜூன்  22) தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கேங்மேன் உள்ளிட்ட பணியாளர் களுக்கு 6 விழுக்காடு ஊதிய உயர்வு,  ஊர் மாற்றல் உத்தரவு, விடுப்பு உள் ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள 5 ஆயிரம் பேருக்கு கேங்மேன் பணியாணை வழங்க வேண்டும்,  கேங்மேன்களை கள உதவியாளர்களாக  பணிமாற்றம் செய்ய வேண்டும், வாரிய ஆணை எண் 2ஐ ரத்து  செய்ய வேண்டும்,  ஒப்பந்த ஊழியர்கள், பகுதிநேர ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பிரிவு 1 மற்றும் 2 அதிகாரிகளுக்கு 4  ஆண்டுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய ஊதிய உயர்வை 10 ஆண்டுகள் என மாற்றியதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் தர வேண்டும், அயல்பணி முறை மற்றும் பணியிடங்களை குறைக் கும் (ரைட்சைசிங்) முறைகளை கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் முழக்கமிட்டனர்.