states

குடிநீர் தொட்டியில் மலம் கழிவு சிபிஎம் இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை,டிச.28- இறையூர் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த  வன்கொடுமையை கண்டித்து  டிசம்பர் 30 அன்று புதுக் கோட்டை மாவட்டம், அன்னவாசலில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் வேங்கைவயல் தெருவில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலம் கலந்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்திட வலியுறுத்தியும், அக்கிரா மத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு  கட்டிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் டிசம்பர்  30 அன்று புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், காவேரி நகரில் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பி னர் கே. சாமுவேல்ராஜ், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை,  மாநிலக்குழு உறுப்பி னர் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயலாளர் எஸ். கவி வர்மன் உள்பட  பெருந்திரளானோர் பங்கேற்கின்ற னர் என்று கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.