சென்னை, அக். 23- ரயில்வேயில் நடைபெற உள்ள தொழிற் சங்க அங்கீகாரத்திற்கான தேர்தலில் போட்டி யிட டிஆர்இயூ சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வேயில் செயல்படும் தொழிற்சங்கங் களின் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் 6 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தல் நடை பெற்றது. அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் நடைபெற வில்லை. டிஆர்இயூ உள்ளிட்ட பல தொழிற்சங் கங்கள் தேர்தல் நடத்த வலியுறுத்தியும் ரயில்வே வாரியம் தேர்தலை நடத்த முன்வரவில்லை. இதையடுத்து 2019ஆம் ஆண்டு டிஆர்இயு சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் தேர்தலை நடத்து மாறு ரயில்வே வாரியத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து நடைபெற்ற விவாதங்களில் டிஆர்இயு சார்பில் இனி வரும் காலங்களில் 5 வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதை ரயில்வே வாரியம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து தொழிற்சங்கத்திற்கான அங்கீ காரத் தேர்தல் 2024 டிசம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட் டது. இதையடுத்து தட்சிண ரயில்வே எம்ப்ளா யீஸ் யூனியன் (டிஆர்இயு) தலைமையில் கூட் டணி அமைத்துள்ள அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோஷியேஷன், அகில இந்திய ஸ்டேஷன் மாஸ்டர்கள் அசோஷி யேஷன், அகில இந்திய ரயில்வே அக்கவுன்ட்ஸ் ஊழியர் அமைப்பு, சதர்ன் ரயில்வே இன்ஜினி யர்ஸ் அமைப்பு, அகில இந்திய கார்டுஸ் கவுன்சில், ரயில்வே லேபர் லிபரேஷன் பிரன்ட், சதர்ன் ரயில்வே பர்சன் வித் டிஸ்எபிலிட்டிஸ் ஆகிய சங்கங்களின் சார்பில் புதனன்று (அக். 23) வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் கூடியிருந்த டிஆர்இயு தலைவர் களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக் களை தெரிவித்தார். பின்னர் மூர்மார்க்கெட் வளா கத்தில் இருந்து பொது மேலாளர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். அங்கு செயல் தலைவர் அ.ஜானகிராமன் தலைமையில் கூட் டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மூத்த தலை வர் டி.கே.ரங்கராஜன், டிஆர்இயு தலைவர் ஜி. சுகுமாறன், பொதுச்செயலாளர் வி.ஹரிலால், உதவித்தலைவர் மேத்யூ சிரியாக் மற்றும் சகோதர சங்கங்களின் தலைவர்கள் பேசினர். பின்னர் தலைவர் ஜி.சுகுமாறன் தலைமை யில் டிஆர்இயு கூட்டணியின் சார்பில் பணி யாளர் நல அலுவலரிடம் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.