தில்லியில் கடுமையான காற்று மாசுபாடு உள்ளது. நாட்டின் தேசிய தலைநகரை தில்லியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றாத வரை, அங்குள்ள மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் மாசு ஒருபோதும் குறையப்போவதில்லை.
தில்லி அமைச்சராக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் கைலாஷ் கெலாட் பலமுறை அமலாக்கத்துறை, வருமான வரி சோதனைக்கு உள்ளானவர். அவருக்கு எதிராக பாஜக மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு சதிகளை நிகழ்த்தியுள்ளது. பாஜகவுடன் செல்வதைத் தவிர கைலாஷ் கெலாட்டுக்கு வேறு வழியில்லை.
பல ஆண்டுகளாக, பல்வேறு நல்ல நீதிபதிகளால் கட்டமைக்கப்பட்டது இந்தியாவின் சட்ட அமைப்பு. இந்த சட்ட அமைப்பில் குறிப்பிட்ட காலத்தில் மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளார் நாட்டின் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். இது ஏற்கத்தக்கது அல்ல.
ஊழல் புகார் குற்றம் சாட்டப்பட்டவர் சிஏஜி இயக்குநர் விஷால் தேசாய். ஆனால் மோடி ஆட்சியில் விசாரணைக்கு பதிலாக பதவி உயர்வுடன் விஷால் தேசாய் இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
தில்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
“3 மே 2023 முதல் மணிப்பூர் பற்றி எரிகிறது. நரேந்திர மோடி உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று பிரசங்கம் செய்கிறார். ஆனால் இன்று வரை அவரால் மணிப்பூருக்குச் செல்ல முடிய வில்லை. பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திப்பதோடு, நிவாரண முகாம்களில் வசிக்கும் மக்களையும் சந்திக்க வேண்டும்” என காங்கிரஸ் பொ துச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி யுள்ளார்.
திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மதத்தினரை மாற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் வேற்று மதத்தினரை விருப்ப ஓய்வில் அனுப்புவதா அல்லது வேறு பணிகளுக்கு மாற்றுவதா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது. தேவஸ்தானத்தில் பணிபுரியும் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்களை, வருவாய்த்துறை உள்ளிட்ட பணிக ளுக்கு மாற்ற அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறங்காவலர் குழு கூறியுள்ளது.
மணிப்பூர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் சித்தார் மிருதுள் நவம்பர் 21ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். அதனால் மணிப்பூர் மாநில அடுத்த உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலிஜியம் குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண குமாரை, மணிப்பூர் மாநிலத்தின் அடுத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலி ஜியம் பரிந்துரை செய்துள்ளது.