கடலூர்,ஜன.24- தமிழ்நாடு முழுவதும் மாதம் ஒரு முறை ஆட்சியர் தலைமையில் குறை கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநிலக்குழு கூட்டம். கடலூரில் மாநிலத் தலைவர் எம்.கருணாமூர்த்தி தலைமையில் நடை பெற்றது. பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி, சிஐடியு மாநில உதவி பொதுச் செயலாளர் வி.குமார் மற்றும் மாநில நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பினர்கன் கலந்து கொண்டனர். மீன்பிடி தடை காலத்தின் போது மீனவர்களுக்கு தடை இருப்பது போல் ஆழ்கடலில் மீன் பிடிக்கும் ராட்சத கப்பல்களுக்கு தடை விதிக்க வேண்டும். கிசான் பயனாளிகள் என்று மீனவர்களுக்கு மீன்வளத் துறையின் மூலம் கிடைக்கும் நிவாரண நிதி தடை செய்யப்பட்டிருப்பதை நீக்கி மீனவ மக்களுக்கு மீன்வளத்துறை மூலமாக கிடைக்கும் நிவாரண நிதியை வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறுவது போல் கடலூர் உட்பட அனைத்து மாவட்டங்களிலும், கடற் கரை மற்றும் உள்நாட்டு மீனவர்கள் உட்பட அனைத்து மீனவர்களையும் சேர்த்து மாதம் ஒரு முறை மீனவர் குறைதீர்ப்பு கூட்டத்தை மாவட்ட ஆட்சி யர் தலைமையில் நடத்த வேண்டும். கடலில் மீன்பிடி தொழில் செய்யும் போது அடிபட்டு இறந்தவர் களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மனைவி அல்லது மகன், மகள்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும். கடல் சுரங்கத்தை கைவிடுக! மீனவர்களின் வாழ்வாதாரங் களை கடுமையாக பாதிக்கும் சுற்றுச் சூழல், கடல் சுற்றுச்சூழல், நீலப் பொருளாதாரம், சாகர்மாலா மற்றும் கடல் பரப்பில் 75 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தாதுக்களை எடுக்கும் கடல் சுரங்கம் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.