states

தோழர் கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு தமிழக சட்டப் பேரவையில் இரங்கல்

சென்னை, அக்.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கேரள மாநில முன்னாள் அமைச்சரு மான கோடியேரி பாலகிருஷ்ணன் மறை வுக்கு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 17 அன்று காலை 10 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் கோடி யேரி பாலகிருஷ்ணன் மறைவு குறித்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். அதில், ‘‘மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் மூன்றுமுறை அக்கட்சியின் கேரள மாநிலச் செய லாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான கோடியேரி பாலகிருஷ்ணன் அக்டோபர் 1 அன்று (சென்னையில்) மறைவுற்றார். அந்த செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது. கொள்கை உறுதிமிக்க தலைவராக விளங்கிய தோழர் கோடியேரி பால கிருஷ்ணன், 1975-ஆம் ஆண்டு நெருக்கடி நிலையின்போது மிசா சட்டத்தின் கீழ் சிறை தண்டனை அனுபவித்தவர். மேலும், அவர் கேரள மாநிலத்தின் அமைச்சராக சிறப்பாகவும் பணியாற்றி யிருக்கிறார். அவரது மறைவால் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாப த்தையும் தெரிவித்துக்கொள் கிறது’’ என்று தெரிவித்தார்.  பின்னர், உறுப்பினர்கள் அனை வரும் இரண்டு மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

;