states

img

அடக்குமுறைகளுக்கு அஞ்சாது போராடியவர் தோழர் சி.கோவிந்தசாமி

சென்னை, அக்.19-  மூத்த தோழர் சி.கோவிந்தசாமி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல்  செய்தி வருமாறு: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சார்ந்த மூத்த தோழர் சி.கோவிந்தசாமி காலமானார் என்ற செய்தி கேட்டு மிக வும் துயருற்றோம். அவரது மறைவிற்கு  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மின்வாரியத்தில் தினக்கூலி தொழி லாளியாக தன்னுடைய வாழ்க்கையை  துவக்கிய தோழர் கோவிந்தசாமி, மின்வாரிய சிஐடியு தொழிற்சங்கத்தின் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற வர்.  1971 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் உறுப்பினரான தோழர் கோவிந்தசாமி தான் பணிபுரியும் பகுதி யில் கட்சியை கட்டுவது, வர்க்க வெகு மக்கள் அமைப்புகளை உருவாக்கு வதில் முனைப்போடு பாடுபட்டவர். விழுப்புரம் மாவட்டத்தில் கட்சியின் மாவட்டக்குழு, மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டத்தின் சிஐடியு மாவட்ட துணைத் தலைவராகவும் செயல்பட்டவர். காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் மக்களை திரட்டி இயக்கம் நடத்தி யதுடன் கைது, பொய் வழக்கு, காவல்  நிலைய சித்ரவதை என அனைத்தை யும் எதிர்கொண்டு மக்கள் நலனை பாது காப்பதில் உறுதியாக நின்றவர். தோழர் சி.கோவிந்தசாமி அவரது  மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்  கும், தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனு தாபத்தையும், ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறோம்.  இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.