சென்னை, ஜூலை 21- வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளியன்று (ஜூலை 21) திறந்து திறந்து வைத்தார். விருதுநகர் மற்றும் குடியாத்தத்தில் ரூ. 9 கோடியிலும், தேனியில் ரூ.3 கோடியே 51 லட்சத்திலும் கட்டப் பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலகக் கட்டடங்கள் மற்றும் நாமக்கல் பதிவு மாவட்டம் சேந்தமங்க லம், கன்னியாகுமரி பதிவு மாவட்டம் பள்ளியாடி ஆகிய இடங்களில் ரூ.2 கோடியே 20 லட்சத்தில் கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங் களையும் அவர் திறந்து வைத்தார். மேலும், செங்கல்பட்டு, திருவள் ளூர், கடலூர், திருவாரூர், திருப்பூர், விருதுநகர் மற்றும் ஓசூர் ஆகிய 7 புதிய வணிகவரி நிர்வாகக் கோட்டங் கள், செங்கல்பட்டு, கடலூர், திருவா ரூர், திருப்பூர், விருதுநகர் மற்றும் ஓசூர் ஆகிய 6 புதிய வணிகவரி நுண்ணறி வுக் கோட்டங்கள். செங்கல்பட்டு, திருவள்ளூர், தாம்பரம், ஆவடி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவா ரூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், தேனி மற்றும் தென்காசி ஆகிய 13 புதிய வணிகவரி மாவட்டங்கள், தாம்பரம் மற்றும் கோவை (தெற்கு) ஆகிய 2 புதிய பதிவு மாவட்டங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.