states

தொழிற்கல்வி பாடப்பிரிவு ரத்து: மாணவர்கள் எதிர்ப்பு

 சென்னை,செப்.2- அரசுப் பள்ளிகளில் டெய்லரிங், பியூட்டிஷியன், வேளாண்மை பொறியியல், பொது இயந்திரவியல், மின் சாதனங் கள் பழுதுபார்த்தல், ஆடை வடிவ மைத்தல் உள்ளிட்ட பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் 9, 10ஆம் வகுப்பு களில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் மூடுவதற்கு ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் தென்காசி, கன்னி யாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 11ஆம் வகுப்பு தொழிற் கல்வி பாடப்பிரிவுகள் தற்போது முதற்கட்டமாக மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.முதல மைச்சர் தொடங்கி வைத்துள்ள நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்க ளுக்கு தொழிற் கல்வியின் முக்கியத் துவத்தை உணர்த்தும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை பள்ளிக் கல்வித் துறை மூட உத்தரவிட்டுள்ளது. மேல் நிலை வகுப்பிற்கான தொழிற் பாடப் பிரிவுக்கான ஆசிரியர்கள் நிய மிக்கப்படவில்லை, பணியாற்றி வரும் ஆசிரியர் ஓய்வுபெறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்க ளால் தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் குறைந்த அளவிலே மாணவர் சேர்க்கை உள்ள தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை மூடுவதற்கு பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் நடை பெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்ட தாகவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கர வர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அரசு பள்ளிகளில் டெய்லரிங், பியூட்டிஷியன், வேளாண்மை பொறி யியல், பொது இயந்திரவியல், மின் சாதனங்கள் பழுது பார்த்தல், ஆடை வடிவமைத்தல், தணிக்கையியல் உள்ளிட்ட பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றன. தொழிற் கல்வி சார்ந்த பாடப்பிரிவில் பல ஏழை எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை, ஆசிரியர் பற்றாக்குறை யால் தொழிற்கல்வி பாடம் மூடப்படு கிறது என அறிவிப்பு வெளியிட்டி ருக்கிறது.  ஒருபுறம் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள நான் முதல்வன் திட்டம் மாணவர்களிடையே தொழிற்கல்விக்கான முக்கியத் துவத்தை உணர்த்துவதாக அமைந் துள்ளது. இந்த நிலையில் தொழிற் கல்வி பாடப்பிரிவுகளை மூட உத்தர விடப்பட்டுள்ளது முரண்பாடாக உள்ளது. தமிழக அரசாங்கம் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பி மாண வர்களின் கல்வி கற்றலை அதிகப்ப டுத்த வேண்டியதை உறுதி செய்ய வேண்டுமே தவிர காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பது என்பதற்காக ஒரு பாடப்பிரிவை நீக்குவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.  ஆகவே தமிழக பள்ளிக்கல்வித் துறை உடனடியாக 11 ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடங்களை இணைத்து அதில் மாணவர்களை கூடுதலாக சேர்ப்ப தற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.