ஒவ்வொரு நாளும், பல்வேறு விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகள் வருகின்றன. இந்த மிரட்டல்களால் பண இழப்பு, மனவேதனை, விமான தாமதங்கள், மனித நேரம் இழப்பு என பல்வேறு இடையூறுகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். ஆனால் மோடி அரசு அலட்சியமாக மவுனம் காத்து வருகிறது.