பலியாக்கப்படும் அரிட்டாபட்டி பல்லுயிர் சூழல் மண்டலம்!
மதுரை, நவ. 18- மதுரையில் பல்லுயிர் சூழல் மண்டலமாக இருக்கும் அரிட்டாபட்டி உள்ளிட்ட 10 கிராமங்களில், வேதாந்தா குழுமம் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் கனிம சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, மதுரை மாவட்ட ஆட்சியரி டம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கனிமக் கொள்ளைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான விவரம் வருமாறு:
ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்
பாஜகக்கு அதிகமான நன்கொடை கொடுக்கும் கார்ப்பரேட் பெருமுதலாளி அனில் அகர்வால் ஆவார். இவரது ‘வேதாந்தா குழுமம்’ பல்வேறு துணை நிறுவனங்களை நடத்தி வருகிறது. அவற்றில் ஒன்றான தூத்துக் குடி ஸ்டெர்லைட் நிறுவனம், சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்காக தற்போது மூடப்பட்டுள் ளது. இதற்காக நீண்ட நெடிய போராட்டங்களு டன், 13 உயிர்களும் பலி கொடுக்கப்பட்டன. இந்நிலையில், அதே வேதாந்தா குழுமம், தனது மற்றொரு நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc) லிமிடெட் சார்பில் தற்போது டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக் கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்காக, மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் கிடைக்கும் பகுதிகளை ‘நாயக்கர்பட்டி பிளாக்’ என வகைப்படுத்தி, அந்த பிளாக்கிற்குள் ‘தெற்குத் தெரு முத்துவேல் பட்டி - குளனிப் பட்டி, கிடாரிப்பட்டி. எட்டிமங்கலம், அரிட்டா பட்டி - வெள்ளாளப்பட்டி, சிலிப்பியாபட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர் பட்டி என 10 கிராமங்களைச் சேர்ந்த மொத்தம் 5000 ஏக்கர் பரப்பளவு நிலத்தை ஏலத்தில் எடுத்துள்ளது
ஒன்றிய அரசின் அதிகாரம் மூலம் ஏலம்
இந்த ஏலம், முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி நடத்தப்பட்டு உள்ளது. இதில் தமிழக அரசுக்கு நேரடியாக எந்தப் பங்கும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த நவம்பர் 7-ஆம் தேதி நடந்த டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்காக நடைபெற்ற ஏலமும் தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாது. ஒன்றிய அரசின் சுரங்க அமைச்சகமானது ஏலம் நடைபெற்றது தொடர்பாக அளித்த செய்திக் குறிப்பு ஆங்கில பத்திரிகையில் வெளிவந்த பின்பே சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் சிலருக்கு மட்டும் தெரிய வந்துள்ளது. முன்னதாக, இந்த பகுதியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான சோதனை குழிகள் போடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு உள்ளன
மறைமுகமாக நடந்த வேலைகள்
அரிட்டாபட்டி போன்ற பகுதிகளில் 2018-இல் அரிட்டாபட்டி ரவிச்சந்திரன் போன்ற சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு சோதனை தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மற்ற பகுதியில் உள்ள மக்கள் யாருக்கும் இந்த சோதனை விபரமே எதுவும் தெரியாது என்பதுதான் யதார்த்த நிலை. மேலூர் பகுதியில் 5000 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் பற்றியும், ஒன்றிய அரசு இதுபற்றி ஆய்வு செய்து வருவது தொடர்பாகவும், இங்கு அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக வாய் திறக்கவில்லை. மாறாக, ஒன்றிய அரசின் சுரங்க அமைச்ச கத்தால் 2019-இல் நாயக்கர் பட்டி பிளாக் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தொடர்பான அனைத்து விபரங்களும் தொகுக்கப்பட்டு ‘தமிழ்நாடு ரிவியூஸ் 2012’ என குறிப்பிட்டு 58-ஆம் பதிப்பு மார்ச் 2021-இல் ஆவணமாக வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது ஏலமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 10 கிராம மக்கள் அகதிகளாகும் சூழல் இதன் காரணமாக, மேற்கண்ட 10 கிராம மக்களும் அகதிகளாக ஊரை விட்டு- விவ சாயத்தை விட்டு, வளர்ச்சி என்ற பெயரில் அகதிகளாக வெளியேற வேண்டியதுடன், டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்திற்காக, அரிட்டாபட்டி பல்லுயிர் சூழல் மண்டலமும், சமணப் படுகை- குடவரை கோவில் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் சின்னங்களும் பாது காக்கப்பட்ட அழகர் மலை வனப்பகுதியும் முழுமையாக அழிக்கப்படும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.
நீர், நிலம், காற்று அனைத்தும் மாசுபடும் ஆபத்து
இப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள பாறைகளால் மலைகளால் உருவாகி யுள்ள ஏரி-குளம் ஊருணி- ஏந்தல்- கண்மாய் என எண்ணற்ற நீர் நிலைகளும் நீர்வழிப் பாதை களும் - ஒன்றிய அரசின் பொதுப்பணித் துறையால் ‘2020-ல் நிலத்தடி நீர் ஆதாரம் பாதுகாப்பாக உள்ளது (SAFE Less Than 70%)’ என அறிவிக்கப்பட்ட - மேலவளவு, கீழவளவு, கருங்காலக்குடி, மேலூர், திருவாதவூர் வரு வாய் குறுவட்டத்திற்கு உட்பட்ட பகுதி களான- நிலத்தடி நீரை நம்பி உள்ள இப்பகுதி விவசாயமும் பெரியாறு கால்வாய் விவசாய மும் முழுமையாக பாதிக்கப்பட்டு அழிந்து விடும். கனிமச் சுரங்கத்திற்காகவே சாலைகள் இந்த டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டத்திற் காகவே மதுரையின் வடபுற பகுதியில் ‘ரிங் ரோடு’ என ‘72A நெடுஞ்சாலைகள்’ போடப்பட்டு வருகின்றன. டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமை யும் நான்கு புறப்பகுதிகளிலும் நெடுஞ்சாலை கள் அனைத்தும் திட்டமிட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளன. இந்த டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்திற்காக வும் கனிமச் சுரங்கத்தை ஒட்டி அமைக்கப் படும் ஆலைகளுக்காகவும் நல்ல தண்ணீர் தேவைக்காக இத்திட்டம் தொடங்கும் முன்பே காவிரியின் உபரி நீரை எடுத்து ‘நிலத்தடி நீர் செறிவூட்டல் மற்றும் வழியில் உள்ள குளங்கள், ஏரிகளில் தண்ணீர் நிரப்புவது’ என்ற பெயரில், சுமார் 16 ஆயிரம் கோடி செலவில் “கரூர் மாய னூர் அருகில் இருந்து காவிரி - தென் வெள்ளாறு - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் என திட்டம் போடப்பட்டு தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடிநீர் திட்டமும் தொழிற்சாலைக்காகவே!
நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்காக என அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர் 3ல் 2 பங்கு தொழிற்சாலை களுக்கு பயன்படுத்தப்படும் என 2021-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திலேயே தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த சட்ட விரோத பன்னாட்டு கிரிமினல் வேதாந்தா நிறுவனம் மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் பொழுது இப்பகுதியில் ஏற்படப் போகும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையும், மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்பும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்பும் பற்றி நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு சூழலியல் பாதிப்புகளான காடழிப்பு, மண்ணரிப்பு, பல்லுயிரிகளின் வாழிடப் பறிப்பு, நீர்நிலைகள் மாசுபடுதல், காற்று மாசுபடுதல், இரைச்சல் வழியாக ஒலி மாசுபடுதல் உள்ளிட்ட எண்ணற்ற சூழல் சீர்கேடுகள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும். ஏற்கனவே, உலகம் முழுக்க செயல்பட்டு வரும் டங்ஸ்டன் சுரங்கங்கள் அதற்கு சான்றாக உள்ளன. தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது எனவே, வளர்ச்சி என்ற பெயரில் லட்சக் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அகதிகளாக வெளியேற்றக் கூடி யதும் பல்வேறு பாதிப்புகளை இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமான டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது என சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கனிமக் கொள்ளைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் கனிமவளங்களைச் சூறையாடும் வேதாந்தாவும் கார்ப்பரேட்டுகளும்
நாட்டில் உள்ள கனிம தொகுதிகளின் நான்காவது கட்ட ஏலத்தின் கீழ் எட்டு முக்கிய கனிம தொகுதிகளின் ஏலத்தை ஒன்றிய மோடி அரசின் சுரங்க அமைச்சகம் முடித்துள்ளதாக மத்திய தகவல் பிரிவின் செய்திக் குறிப்பு கடந்த வியாழக்கிழமை தெரிவித்தது. மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் உள்ள டங்ஸ்டன் தொகுதியும் இதில் அடங்கும். இது உட்பட பல கனிமத் தொகுதிகளுக்கான ஏலத்தை, கொடிய நிறுவனமான வேதாந்தா கைப்பற்றியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பாலேபல்யம் எனுமிடத்தில் உள்ள டங்ஸ்டன் மற்றும் இதர கனிம தொகுதிக்கான ஏலத்தையும் வேதாந்தாவின் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் வென்றுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள டெபோ எனுமிடத்தில் உள்ள வனேடியம் மற்றும் கிராஃபைட் தொகுதி, கர்நாடகாவில் உள்ள சன்யாசிகோப்பா எனுமிடத்தில் உள்ள கோபால்ட், மாங்கனீஸ் மற்றும் இரும்பு தொகுதி ஆகியவற்றையும் வேதாந்தா லிமிடெட் ஏலத்தில் கைப்பற்றியுள்ளது. மற்ற வெற்றியாளர்களில் மாம்கோ மைனிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள எண்டோலின் - இஷோலின் கிராஃபைட் தொகுதி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பர்வார் பாஸ்ஃபரைட் தொகுதி ஆகியவற்றை பெற்றுள்ளது. ஒடிசா மெட்டாலிக்ஸ் பிரைவேட் லிமிடெட் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ராத்பு கிராஃபைட் மற்றும் வனேடியம் தொகுதியையும், ஆயில் இந்தியா லிமிடெட் ஃபோப் கிராஃபைட் மற்றும் வனேடியம் தொகுதியையும் வென்றுள்ளன.