states

அருந்ததிய இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்க!

கோயம்புத்தூர், டிச. 1 - ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அருந்ததியர் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட சாதியாதிக்க கொலைவெறித் தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது  செய்வதுடன், பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உரிய மருத்துவ வசதியும், இழப்பீடும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் நவம்பர் 30, டிசம்பர் 1 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தாலுகா பொலவக்காளிபாளையம், இந்திரா நகரை சேர்ந்த பட்டியலின அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் நவீன்குமார், கிருபாகரன் மீது 21.11.2023 அன்று சாதி ஆதிக்க மனப்பான்மையுடன் கொலைவெறி தாக்கு தல் நடத்தப்பட்டது. இந்த வன்கொடுமை செயலை  செய்த 20 நபர்கள் மீது 24.11.2023 அன்று வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 10 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டும், இது வரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. சாதி ஆதிக்க சக்திகள் இச்சம்பவத்தை திசைத்திருப்பும் வகையிலும் தாங்கள் செய்த குற்றச் செயலை மறைத்திட கொலைவெறி தாக்குதலுக்குள்ளான இரண்டு இளைஞர்கள் மீது திருட்டுக் குற்றம் சாட்டி, காவல்துறையும் பாதிக்கப்பட்ட இரு இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டனத்திற்குரியது. தாக்குதலில் ஈடுபட்டு- வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள வன்கொடுமை குற்றவாளிகள் 20 பேர் மீதான வழக்கை ரத்து செய்திட வேண்டும் என சாதிய ரீதியாக அணிதிரண்டு மறியல்  நடத்திய சம்பவம் அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கும் தந்திரமேயாகும். எனவே, சாதி ஆதிக்க மனப்பான்மையுடன் கொலைவெறிச் செயலில் ஈடுபட்டு வழக்கு பதிவுசெய்துள்ள அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு, பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும் என்றும், காயம் அடைந்த இளைஞர் களுக்கு மருத்துவ உதவிகளும், உரிய இழப்பீடும் வழங்கிட தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.