states

சீருடைப் பணியாளர் தேர்வு: இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, செப்.7- சீருடைப் பணியாளர் தேர்வுக ளுக்கான அரசின் இலவச பயிற்சி வகுப்பில் சேர செப்.14 ஆம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் குடிமைப்பணி கள் பயிற்சி மையத் தலைவரும், தலைமைச் செயலருமான வெ.இறை யன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள  சர் தியாகராயர் கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய மையங்களில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற டிஎன்பி எஸ்சி குரூப்-4 எழுத்துத் தேர்வில் இப்பயிற்சி மையத்தின் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மட்டும் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் வழங்கப் பட உள்ளன. இப்பயிற்சி குறித்த  கூடுதல் விவரங்கள் மற்றும் இதற் கான விண்ணப்பப் படிவம்  ஆகியவை www.civilservicecoa ching.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் இந்த இணைய தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்.14-ம் தேதி வரை பயிற்சி மையங் களில் நேரடியாக அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 24621475 மற்றும் 24621909 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி வகுப்புகள் செப்.21 முதல் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

;