சென்னை,ஜூலை 5- அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை தொடங்க அனு மதிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு:- முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா, மாவா விநியோகிப் பாளர்களிடமிருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர் பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. மத்திய புலனாய்வு அமைப்பான (சிபிஐ) வழக்குப்பதிவு செய்து விசாரித்து, அவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சி.பி.ஐ. கோரியது. மாநில அமைச்சரவையின் இந்த இசைவு ஆணை கோரும் சிபிஐ-யின் கோரிக்கை ஆளுநர் அலுவலகத் துக்கு 12.9.2022 அன்று தமிழக அரசு அனுப்பியது. ஆனால், இதுவரையில் இந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுவது இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
இதேப்போன்று, மேலும் இரண்டு நிகழ்வுகளில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி. வீரமணி மற்றும் முன்னாள் போக்கு வரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்க இசைவு ஆணை கோரியது. இந்தக் கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்களை முறையே 12.9.2022 மற்றும் 15.5.2023 ஆகிய தேதி களில் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கை கடிதங்கள் நீண்ட காலமாக நிலுவை யில் உள்ளன. முந்தைய அதிமுக அமைச்சர்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் நீதிமன்ற விசார ணையைத் தொடங்க தேவையான இசைவு ஆணையை இதுவரை ஆளு நர் வழங்கவில்லை. ஊழல் வழக்கு களில் இசைவு ஆணை நிலுவையில் இருப்பது தவிர, மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பதின்மூன்று (13) மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. இவற்றில் இரண்டு மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலு வையில் உள்ளன. எனவே, மேற்குறிப் பிட்டுள்ள முக்கியமான கோப்புகள் மற்றும் மசோதாக்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, இனியும் தாமதிக்கா மல் ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை தொடங்க இசைவு ஆணையையும், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.