states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஆளுநருக்கு வேலை இல்லை: உதயநிதி

அதிமுக தான் பாஜகவிற்கு அடிமையாக உள்ளது. தமிழக ஆளுநருக்கு வேறு வேலை எதுவும் இல்லாததால் அடிக்கடி தில்லிக்கு சென்று வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் மேட்டூரில் இருந்து சரியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்திடம் பேசி தமிழ்நாட்டுக்கு தண்ணீரை பெற்றுத் தர முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என திருச்சியில் செய்தியாளர்களிடம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

கீழ்பவானி கால்வாயில் நீர் திறப்பு

 ஆகஸ்ட் 15-ல் கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி உறுதியளித்துள்ளார். அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கப்படுவதற்கு முன் நிலம் தந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்துள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு வியாழக்கிழமை பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இருவரும்  எந்தெந்த அம்சங்களில் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர். என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேட்டூரில் மின் உற்பத்தி நிறுத்தம் 

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படு கிறது. இந்நிலையில், 2-ஆவது பிரிவில் 600 மெகாவாட்டும், முதல் பிரிவில் 1-வது அலகில் 210 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு முழு உற்பத்தி துவங்கும் என்று மேட்டூர் அனல் மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆளுநரின் வரம்பு மீறல்: மநீம எதிர்ப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்  ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக தனது அதிகார வரம்புகளை மீறி செயல்படுவது ஏற்புடை யது அல்ல என்றும் மாநில அரசின் வளர்ச்சி பணிகளை,  நலத்திட்டங்களை, கொள்கை  முடிவுகளை  தாமதிப்பதால், நிராகரிப்பதால் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மக்கள் தான் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேக அளவீடு கருவிகளை பொருத்த முடிவு

தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை மாநகரின் அவினாசி சாலை, சத்தியமங்கலம் சாலை மற்றும்  பாலக்காடு சாலையில் 6  தானியங்கிவேக அளவீடு கருவிகளைப் பொருத்த மாநகர காவல்துறை முடிவு  செய்துள்ளனர். 40 கி.மீ வேகத்தைக் கடக்கும் வாகனங்கள் கேமராவில் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதித்து ரசீது அனுப்பி வைக்கப்பட உள்ளது.

காணாமல் போன தக்காளி சாதம்

தமிழகத்தில் தக்காளி விலை உயர்வு தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. சில்லறை காய்கறி கடைகளில் தக்காளி கிலோ ரூ.100, ரூ.120 என்றே  விற்கிறார்கள். தக்காளி விலை குறையாமல் இருப்பதால் ஓட்டல்களில் தக்காளி பயன்பாடு கணிசமாக குறைக்கப்பட்டு விட்டன. தக்காளி பயன்படுத்தக் கூடிய உணவுகள் ஒரு வாரமாக நிறுத்தப்பட்டு விட்டன. தக்காளி சட்னி வாடிக்கையாளருக்கு வழங்குவது இல்லை. சைவ ஓட்டல்களில் மதியம் விற்பனை செய்யப்படும் தக்காளி சாதம் நிறுத்தப்பட்டு உள்ளது.

அரசின் நடவடிக்கையில் தலையிட மறுப்பு

1985-ல் ராமச்சந்திரா அறக்கட்டளை தரப்பில் போரூர் அருகே மருத்துவக்கல்லூரி தொடங்க 269 ஏக்கர் நிலத்தை மீட்க முடிவெடுத்துள்ள நிலையில் அதன் நடவடிக்கை இன்னும் முழுமையாக தொடங்கவில்லை என்று அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனுதாரர் நிறுவனத்தின் கடன் பரிவர்த்தனைக்கு, வங்கி நடவடிக்கைக்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

டோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் என்றென்றும் ‘தல’யாக இருக்கும் எம்.எஸ்.டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களுடைய சாதனைகள் மற்றும் தன்னடக்கம் ஏராளமான இளைஞர்களுக்கு உத்வேகமாக இருந்திருக்கிறது. குறிப்பாக சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு உத்வேகமாக இருந்துள்ளீர்கள். தொடர்ந்து பிரகாசிக்கவும், உங்கள் ஒப்பற்ற தலைமைப் பண்புகளால் அனைவரையும் ஊக்குவிக்கவும் வாழ்த்துக்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மோசமான வானிலை : அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்கான யாத்திரை, ஜூலை 1 அன்று துவங்கியது. பால்தால் மற்றும் பஹல்காம் ஆகிய இரண்டு முகாம்கள் வழியாக பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வந்தனர். இதுவரை 84 ஆயிரத்து 768 பேர் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். வெள்ளிக்கிழமையன்று பால்தால், பஹல்காம் ஆகிய இரண்டு முகாமில் இருந்தும் 17 ஆயிரத்து 202 பேர் யாத்திரை மேற்கொள்வதாக இருந்தனர். இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக யாத்திரையை தற்காலிகமாக அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். ஆகஸ்ட் 31 வரை அமர்நாத் யாத்திரை நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகள் கூட்டம்: விசிக-விற்கு அழைப்பு!

பாஜக-வைத் தோற்கடிக்கும் வகையில், 2024 மக்களவைத் தேர்தலை கூட்டாக சந்திப்பது என கடந்த ஜூன் 23 அன்று பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் கூடி முடிவு செய்தன. இதன் அடுத்தகட்டமாக, ஜூலை 17, 18 தேதிகளில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

பொதுசிவில் சட்டத்திற்கான வேலைகள் துவங்கிவிட்டன : பாஜக

பொது சிவில் சட்டம் என்ற பெயரில், மொழி, இனம், மதவழிச் சிறுபான்மையினரை ஒடுக்கும் திட்டத்தை பாஜக அரசு கையில் எடுத்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பொது சிவில் சட்டம் நாட்டின் ஒருமைப்பாட்டைத் துண்டாடும் என்று எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், “பொது சிவில் சட்டம் என்பது ஆளும் பாஜக-வின் தேர்தல் அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்பாடுகள் தொடங்கி விட்டன. அதன் வெளிப்பாடு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்” என்று ஒன்றிய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மிரட்டல் விடுத்துள்ளார்.

தேர்தல் ஆதாயத்திற்காக சவுகான் நாடகம் : மாயாவதி

“மத்தியப் பிரதேச முதல்வர் (சிவ்ராஜ் சிங் சவுகான்) சித்தி மாவட்டத்தில் சிறுநீர் கழித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரை சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போபாலுக்கு வரவழைத்து, முதல்வர் இல்லத்தில் கேமிராக்கள் புடைசூழ கால்களைக் கழுவினார். இது அரசாங்கம் வருத்தம் தெரிவிப்பது போல் தெரியவில்லை, நாடகங்கள் மற்றும் தேர்தல் ஆதாய அரசியல் செய்வது போல உள்ளது” என்று உ.பி. முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி விமர்சித்துள்ளார். மத்திய பிரதேச மக்கள், குறிப்பாக ஒதுக்கப்பட்ட சமூகங்கள் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் மிகப்பெரிய அளவிற்கு வாழ்க்கைச் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்றும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியை இன்னும் புறக்கணிக்கிறார் சந்திரசேகர ராவ்?!

பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமையன்று தெலுங்கானா மாநிலம் வாரங்கலில், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே வேகன் உற்பத்தி பிரிவு உள்பட ரூ. 6100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மோடியின் இந்நிகழ்ச்சிக்கு மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்நிகழ்ச்சியில் கே. சந்திரசேகர ராவ் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தெலுங்கானா வரும்போதும், அவரை வரவேற்பதையும், நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதையும் சந்திரசேகர ராவ் தவிர்த்து வருகிறார். இதுவரை 5 முறை பிரதமர் மோடியை அவர் புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியாட்களுக்கு வழங்கப்படும் நிலங்கள்: மெகபூபா புகார்

“வீடற்ற மக்களுக்கு நிலம் வழங்கும் சாக்குப்போக்கின் கீழ் துணை நிலை ஆளுநரின் நிர்வாகம் குடிசைகளையும், வறுமையையும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இறக்குமதி செய்கிறது” என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். “அதுமட்டுமன்றி இந்த திட்டத்தின் மூலம் வெளியாட்களுக்கு நிலத்தை வழங்கி, யூனியன் பிரதேசத்தின் மக்கள்தொகையை மாற்றியமைப்பதற்கான முயற்சியும் நடக்கிறது” என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே, “வீடு வழங்கும் திட்டம் குறித்த மெகபூபா முப்தியின் கூற்று உண்மைக்கு புறம்பானது. எந்தப் புரிதலும் இல்லாமல் உள்ளது. சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வெளியாட்களுக்கு நிலம் ஒதுக்கப்படவில்லை” என துணை நிலை ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில், திருமணம் ஆகாதவர்களுக்கு மாதம் ரூ. 2,750

ஹரியானா மாநில அரசு ஏற்கெனவே 60 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட குறைந்த வருமானம் கொண்ட திருமணமாகாதவர்கள் மற்றும் விதவைகளுக்கும் மாதம் 2 ஆயிரத்து 750 ரூபாய் ஓய்வூதியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேபோல, ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு குறைவாக உள்ள 40 முதல் 60 வயதுடைய ஆண் மற்றும் பெண் விதவைகளுக்கும் மாதந்தோறும் ரூ. 2 ஆயிரத்து 750 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

மெட்டா மீது வழக்குத் தொடரப்போவதாக டுவிட்டர் மிரட்டல்

“டுவிட்டரின் வர்த்தக ரகசியங்கள், அறிவுசார் சொத்துரிமையைப் பயன்படுத்தி “திரெட்ஸ்” உருவாக்கப்பட்டுள்ளது. டுவிட்டரின் “காப்பிகேட்” திரெட்களை உருவாக்க டஜன் கணக்கான முன்னாள் டுவிட்டர் ஊழியர்களை மெட்டா பணியமர்த்தியுள்ளது தவறானது. இது தொடர்பாக வழக்கு தொடரவுள்ளோம்” என கூறி மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு அனுப்பிய கடிதத்தில் டுவிட்டர் வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரோ கூறியுள்ளார். 

பாலியல் துன்புறுத்தல் வழக்கு : பாஜக எம்பிக்கு சம்மன்

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பான குற்றப்பத்திரிகை தொடர்பாக பாஜக எம்பியும்,  மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் உதவி செயலாளர் வினோத் தோமர் ஆகியோர் ஜூலை 18 அன்று நேரில் ஆஜராக தில்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 

லாரிகளில் ஏசி கட்டாயம்: ஒன்றிய அரசு ஒப்புதல்

என்2 மற்றும் என்3 லாரிகளின் கேபின்களில் குளிர்சாதன வசதி கட்டாயமாக்கப்படும் வரைவு அறிக்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. லாரி ஓட்டுநர்கள் சாலை பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகின்றனர். இதன் மூலம் லாரி டிரைவர்களின் செயல்திறனை மேம்படுவதுடன், சோர்வு பிரச்சனை தீர்க்கப்படும் என ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடலூரில் ரூ. 20 க்கு தக்காளி விற்பனை

கடலூர், ஜூலை 7- கடந்த ஒரு வார காலமாக 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத் தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு வித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளிடமிருந்து நேர டியாக கொள்முதல் செய்து கூட்டுறவுத் துறை மூலம் நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு ஒரு கிலோ 60 ரூபாய்க்கு வழங்க உத்தரவிடப்பட் டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை மூலம் நியாயவிலைக் கடைகளில் மலிவு விலை தக்காளி விற்பனை துவங்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் நட மாடும் வாகனம் மூலம் மலிவு விலை யில் தக்காளி விற்பனை சேவை தொடங்க ப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளியன்று (ஜூலை 7) காலையில் கடலூர் பகுதியில் ஒரு காய்கறி கடையில் தக்காளி கிலோ  20 ரூபாய்க்கு விற்கப்படும் என பதாகை வைக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்று வட்டார மக்கள் ஏராளமானோர் முண்டி யடித்து வரிசையில் நின்றனர். கடை உரி மையாளர் ஒருநபருக்கு ஒரு கிலோ மட்டும் வழங்கினார். ஆனால் கூட்டம் அலை மோதியது. இரண்டு மணி நேரத்தில் 600 கிலோ தக்காளி விற்பனையானது.

உணவுத் திருவிழா :  சென்னையில்  இன்று துவக்கம்

சென்னை,ஜூலை 7- சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ‘வேளாண் வணிக திருவிழா’ எனப்படும் வேளாண் விளை பொருள்கள் மற்றும் மதிப்பு கூட்டப் பட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை சனிக்கிழமை (ஜூலை 8 ) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த வணிக திருவிழாவை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை யன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்த கண்காட்சியில் 100- க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறு கின்றன. குறிப்பாக பாரம்பரிய மற்றும் சிறுதானிய உணவகங்கள் பங்கேற்கும் உணவுத் திருவிழாவில் இடம் பெறு கிறது. 100-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்கள் தங்களின் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய உள்ளனர். உணவு பதப்படுத் தும் மற்றும் மதிப்பு கூட்டும் இயந்திரங்க ளும் இடம்பெறுகின்றன. இந்த திருவிழாவில் வல்லுநர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், உற்பத்தி யாளர், கொள்முதலாளர் கலந்துரை யாடல்கள் இடம்பெறுகின்றன. சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப் படுகின்றன.

அண்ணாலை  அதிமுக பற்றி இனி பேசமாட்டார்:  டி.ஜெயக்குமார்

சென்னை, ஜூலை 7- அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் வெள்ளிக் கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் தலைவர் அண்ணாமலை தனது தவறை  திருத்திக் கொண்டுள்ளார். இனிமேல் அவர் அதிமுக பற்றியோ, அதன் தலை வர்கள் பற்றிய விமர்சனம் செய்ய மாட்டார்” என்றார். ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோருடன் அதிமுக வுக்கு எந்த தொடர்பும் இல்லை. நாடாளு மன்றத் தேர்தலில் தனது மகன் ரவீந்திர நாத் வெற்றி பெற்றால் போதும் என்று ஓ.பன்னீர்செல்வம் பணத்தை வாரி இறைத்து செலவு செய்தார் என்றும் அவர் கூறினார்.

‘மோசடி செய்பவர்களுக்கு பதிலாக ராகுல் தண்டிக்கப்படுகிறார்’

“ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுதொடர்பான தீர்ப்பு நீதியின் கேலிக் கூத்தாக உள்ளது. நீரவ் மோடி போன்ற வங்கி மோசடி செய்பவர்களை தண்டிக்கா மல், அந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக ராகுல் காந்தி தண்டிக்கப் படுகிறார்” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கண்டனம் தெரி வித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளுக்கு ரூ.52,000 கோடி

“பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம், ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி உள்ளிட்ட 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளுக்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.52,000 கோடி செல விடப்படும் எனவும், தேர்தல் வாக்குறுதிகளால் 1.3 கோடி குடும்பங்கள் பயனடை வார்கள்” என கர்நாடக முதல்வர் சித்தராமையா வெள்ளியன்று அம்மாநில சட்டப்பேரவையில் தெரி வித்தார்.

உத்தவ் அணியிலிருந்து ஷிண்டே அணிக்கு மேலும் எம்எல்சி தாவல்

உத்தவ் சிவசேனா அணி யின் முக்கிய தலைவரும், எம்எல்சியுமான நீலம் கோர்ஹே வெள்ளியன்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் ஷிண்டே அணியில் இணைந் தார். உத்தவ் அணியிலிருந்து ஷிண்டே அணிக்கு தாவும் மூன்றாவது எம்எல்சி நீலம் கோர்ஹே ஆவார். இதற்கு முன் மனிஷா கயண்டே, விப் லோவ் பஜோரியா ஆகியோர் ஷிண்டே அணிக்கு தாவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் : பிரதமர் மோடியின் மௌனம் வினோதமானது

“பிரதமர் மோடி சத்தீஸ் கர், உ.பி.க்கு செல்கிறார். அடுத்து  தெலுங்கானா, ராஜஸ்தானில் இருப்பார். அவரது புகைப்படங்கள், திரிக்கப்பட்ட உண்மைகள், எதிர்க்கட்சிகளை குறி வைத்து அதிக அவமானங் களை கட்டவிழ்த்துவிடுவது என சுழன்றாலும், மணிப் பூரைப் பற்றி 66 நாட்களுக்கு பிறகும் ஒரு வார்த்தை கூட இல்லை. மோடிக்கு வலி, துக்கம், வேதனையின் வெளிப்பாடு எதுவுமே கிடையாது. அமைதி, நல்லி ணக்கத்திற்கான வேண்டு கோளும் இல்லை. மணிப் பூரில் அவரது நடத்தை அதி ர்ச்சியூட்டும் வினோதமான தாக உள்ளது” என காங் கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள் ளார்.