ஜம்மு-காஷ்மீரில் 2-ஆம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 23 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த இத்தேர்தலில் 61.38 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி, ரஜெளரி, பூஞ்ச், காஷ்மீர் பகுதியில் உள்ள ஸ்ரீநகர், புத்காம், கந்தர்பால் ஆகிய 6 மாவட்டங்களின் 26 தொகுதிகளுக்காக வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.