திருவனந்தபுரம் கோப்புகள் மற்றும் புகார்களுக்கு தீர்வு காண்பதில் விதிகளை மீறுவது தங்களது உரிமை என்பதுபோல் அரசு அலுவலகங்களில் நடந்து கொள்வதை ஏற்க முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். இதனை நாடு விரும்புவ தில்லை எனவும், இவ்வாறான நடைமுறைகள் தொ டர்ந்தால் அரசாங்கம் கடுமையான நிலைப் பாட்டை எடுக்கும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் நடை பெற்ற மாநில அளவிலான தாலுகா அதாலத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மேலும் பேசியதாவது: நாட்டு மக்கள் சரியான அளவில் ஆட்சியின் சுவையை அனுபவிக்க வேண்டும். சிக்கல்களைத் தீர்ப்பதில் தாமதம் என்ற புகார்கள் இல்லாமல் தீர்வு காணப்பட வேண்டும். அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணி களைச் செய்ய வேண்டும். கோப்புகள் இன்னும் நிலுவையில் உள்ளன. அதை முடிவுக்கு கொண்டு வர அரசு பெரும் முயற்சி எடுக்கும். இதற்கு தலைமைச் செயலகம் மற்றும் பிற அலுவலகங்க ளில் தலையீடு இருக்கும்.
பல்வேறு அலுவலகங்களில் உள்ள அதிகாரி கள் மக்களின் சேவகராக பணியாற்ற வேண்டும். பிரச்சனையை தீர்க்க மக்கள் அவதிப்படும் நிலை இருக்கக்கூடாது. சேவை என்பது மக்களின் உரி மையாகும். அதனால்தான், ஒவ்வொரு கோப்பின் பின்னும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த அரசு பொறுப்புக்கு வந்ததும், ஊழியர்களு க்கு நினைவூட்டியது. மக்களுக்கு உதவும் வகை யில் ஆன்லைன் அமைப்பு பலப்படுத்தப் படும். 800க்கும் மேற்பட்ட சேவைகள் ஏற்கனவே ஆன் லைனில் கொண்டு வரப்பட்டுள்ளன. பெரும்பா லான மக்கள் உதவியை நாடும் பஞ்சாயத்து மற்றும் வருவாய்துறை மட்டங்களில் அதிகமான ஆன் லைன் சேவைகள் செயல்படுத்தப் பட்டுள்ளன.
மக்களுக்காகச் செயல்படுத்தப்படும் நல்ல விச யங்களை அவர்கள் தெரிந்து கொண்டால் அரசு க்கு நல்லதாகிவிடும் என்று நினைப்பவர்கள் சிலர் உள்ளனர். ஆரோக்கியமான அணுகுமுறைக ளைக் கடைப்பிடிப்பதும், முன்பதிவில்லா ஒத்து ழைப்பை வழங்குவதும் நம் நாட்டில் நடப்ப தில்லை. இதுபோன்ற சமயங்களில் சிலரது நல னைக் காக்க ஒரு சிறப்பு வகை பிரச்சாரம் நடை பெறும். அத்தகையவர்களின் நோக்கம் எதிர்மறை யான சிந்தனை மற்றும் எதிர்மறையான அணுகு முறையை வளர்ப்பதாகும். ஆனால் மக்கள் அனு பவத்தின் அடிப்படையில் தீர்ப்பளிப்பார்கள். அர சாங்கத்தினால் நடைமுறைப் படுத்தப் படும் நல்ல விசயங்கள் தொடர்ந்து மக்களிடம் முன் வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்கறையும் அரவணைப்புமாக தாலுகா அளவிலான அதாலத்துகள் கடந்த ஆண்டு நடத்தப்பட்டன. கடந்த முறை இதற்கு மக்கள் பெரி தும் ஒத்துழைத்தனர். இம்முறையும் மக்கள் நல்ல முறையில் அடையாளம் கண்டு வருகின்றனர். முன்னதாக முழு அமைச்சரவையும் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளை புரிந்து கொள்வதற்காக பிராந்திய அளவில் கூட்டங்களை நடத்தியதாகவும் முதலமைச்சர் கூறினார்.