states

img

துறைமுகங்களின் துறைமுகம்

திருவனந்தபுரம், ஜூலை 12- “கேரளத்தின் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது; ‘விழிஞ்ஞம்’ இப்போது ‘துறைமுகங்களின் துறைமுகம்’ ஆகியுள்ளது; இது நாட்டுக்கு பெருமை தரும் தருணம்!” என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஒத்துழைப்பு அளித்து தேவையான ஆதரவை வழங்கிய அனைவருக்கும் கேரளத்தின் நன்றி யையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘விழிஞ்ஞம்’ துறைமுக சோதனை ஓட்டத்தை, வெள்ளியன்று தொடங்கி வைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மேலும் பேசியிருப்பதாவது:

பொருளாதார வளர்ச்சிக்கு துறைமுகங்கள் மிகப்பெரிய உந்துசக்தி யாக உள்ளன. விழிஞ்ஞம் சாத்திய மாகி இருப்பதன் மூலம், கேரளத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. இது நாட்டுக்கே பெரு மையான தருணம். உலகில் விரல்விட்டு எண்ணத்தக்க இதுபோன்ற சில துறை முகங்கள் மட்டுமே உள்ளன. இதன் மூலம் இந்தியா உலக வரைபடத்தில் இடம் பிடித்துள்ளது. விழிஞ்ஞம் துறை முகத்திற்கு ஏராளமான தாய்க்கப்பல் கள் வரப்போகின்றன. உலகின் மிகப் பெரிய கப்பல்கள் நிறுத்தும் இடமாக விழிஞ்ஞம் வளர்ந்துள்ளது.

இது சோதனை ஓட்டம் என்றாலும் துறைமுகத்தின் செயல்பாடு இத்துடன் தொடங்கும். விரைவில் முழு  செயல்பாட்டுக்குச் செல்ல உள்ளது. தாய்த் துறைமுகம், துறைமுகங்களின் துறைமுகம் என்று வர்ணிக்கக்கூடிய வசதிகள் கொண்ட துறைமுகமாக விழிஞ்ஞம் மாறி வருகிறது என்பது பெருமையான தருணம். இங்குள்ள பெருமைக்கு அளவே இல்லை என்பது சிறப்பு. இது முதல் கட்டத்தின் நிறைவு.  இரண்டு, மூன்று, நான்காவது கட்டங் களும் முடிக்கப்பட உள்ளன. பின்னர் அது நன்கு பொருத்தப்பட்ட மற்றும்  முழுமையான பரந்த துறைமுகமாக மாறும். இது 2045-இல் நிறைவடையும் என்று முன்னர் கருதப்பட்டது.

ஆனால், அதற்கு முன்னரே, சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பே பணிகள் முழுமையடையும் நிலைக்குக் கொண்டு வர முடியும் என்பது தெரிகிறது. 2028-ஆம் ஆண்டுக்குள் இது முழு அளவிலான துறைமுகமாக மாறும் என்பது மிகவும் உற்சாகமானது. 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த  வளர்ச்சி சாத்தியமாகும்.

இது அரசின் மற்றொரு சாதனையாக மாறுகிறது.  இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டார். விழாவுக்கு துறைமுக, கூட்டுறவு, தேவசம் துறை அமைச்சர் வி.என். வாச வன் தலைமை வகித்தார். ஒன்றிய துறை முக, கப்பல் மற்றும் நீர் வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், கேரள அமைச்சர்கள் வி. சிவன்குட்டி, கே. ராஜன், கே.என். பாலகோபால், சஜி செரியான், ஜி.ஆர். அனில், மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம், சட்டமன்ற உறுப்பினர் எம். வின் சென்ட், விழிஞ்ஞம் துறைமுக நிர்வாக இயக்குநர் திவியா எஸ் அய்யர் ஆகி யோர் பேசினர்.