states

img

குஜராத்தில் ஆற்றில் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி

சூரத்தில் ஆற்றில் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் இக்பால் குடிசைப் பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் வெள்ளியன்று மாலை ராண்டர் பகுதியில் உள்ள தபி ஆற்றின் கரையில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அரபிக்கடலில் ஏற்பட்ட அதிக அலையின் காரணமாக ஆற்றின் நீர் மட்டம் திடீரென உயர்ந்ததில் அவர்கள் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உயிரிழந்த முகமது ஃபகிர், ஷஹலாதத் ஃபகிர் ஆகிய இருவரின் உடலும் வெள்ளியன்று இரவு தாமதமாக மீட்கப்பட்டது. சானியா ஷேக்கின் உடல் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. 
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.