states

img

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்!

பாலியல் வழக்கில் கைதான பாஜக கூட்டணி கட்சி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு அமைப்புக்கு பெங்களூரு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதை 3000க்கும் மேற்பட்ட காணொளியாக பதிவு செய்துள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட இரு பெண்கள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில் 2 வழக்கு பதியப்பட்டு, சிறப்புப் புலனாய்வு பிரிவு(எஸ்.ஐ.டி) விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், தலைமறைவாக ஜெர்மனியில் இருந்து  வந்த  ரேவண்ணாவை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து சிறப்பு புலனாய்வுக் குழு இன்று அதிகாலை கைது செய்தது. இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இவ்வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு அமைப்புக்கு பெங்களூரு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.