states

img

2 வருடத்தில் 21 பேரை கொன்ற Man Eater: சிக்கியது வனத்துறையிடம்!  

21 பேரை கொன்ற ஆட்கொல்லியான பெண் புலி பிடிபட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.  

உத்தரப்பிரதேசத்தில் Man Eater என்று சொல்லப்படும் இந்த பெண் புலி கடந்த 2020 முதல் தற்போது வரை சுமார் 21 பேரை கொன்றுள்ளது. இந்த ஆட்கொல்லி புலியை தற்போது உத்தரப்பிரதேச வனத்துறையினர் பிடித்துள்ளனர். இந்த பெண் புலியை பிடிக்கப்போன இடத்தில் மற்றொரு ஆண் புலியும் பிடித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிடிபட்ட ஆண் புலியை வனப்பகுதியிலும், பெண் புலியை லக்னோ வனவிலங்கு காப்பகத்திலும் விடப்பட்டுள்ளது. காப்பகத்துக்கு அருகே இருந்த கிராம மக்களை இப்புலிகள் தொடர்ந்து தாக்கியதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புலிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த 4 பேரின் உடல்களின் உதிரிப்பாகங்களை ஜூன் மாதத்தில் சுமார் 10 நாள் இடைவெளிக்கு வனத்துறை கண்டறிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.    

இதுகுறித்து வனவிலங்கு காப்பக இயக்குநர் கூறுகையில், 9 வயதான பெண் புலியை பிடித்தபோது, அதன் உடலில் சில காயங்கள் இருந்ததாகவும், அதனால் அப்புலியை தற்போது காப்பகத்திலுள்ள மறுவாழ்வு மையத்தில் விட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்டுப்பகுதியிலிருந்து வனவிலங்கு பூங்காவுக்கு வந்துள்ளதால், தற்போதைக்கு இப்புலியை தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். அதன் நடத்தையை பொறுத்தே அடுத்தடுத்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.