உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சாம்பல் மாவட்டத்தில் மூடுபனி காரணமாக கேஸ் டேங்கர் லாரி பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்துகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.