states

img

3 நாட்களாக மிதக்கும் விஜயவாடா ஆந்திரா, தெலுங்கானாவில் பலி எண்ணிக்கை 32ஆக உயர்வு

ஹைதராபாத் வங்கக்கடலில் ஏற் பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் கார ணமாக நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கேரளா, குஜராத் மாநிலங்களைத் தொ டர்ந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் கடந்த 72 மணி நேரமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. 

குறிப்பாக 50 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெரும் மழை கொட்டித் தீர்த்துள்ளதால் ஆந்திரா வில் உள்ள ஆறுகள் அனைத்தி லும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. 

கிருஷ்ணா நதியில் மட்டும் விநாடிக்கு 10 லட்சம் கனஅடி வெள்ளம் கரையை தாண்டி ஓடும் நிலையில், அதன் கரையோர பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற் பட்டுள்ளது. குறிப்பாக என்டிஆர் மாவட்ட தலைநகரான விஜய வாடா நகரம் தொடர்ந்து 3ஆவது நாளாக வெள்ளத்தில் மிதந்து வரு கிறது. விஜயவாடா மட்டுமின்றி ஆந்திராவின் குண்டூர், நந்தியால், திருப்பதி, சித்தூர், நெல்லூர் என 6க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் என மாநிலம் முழுவதும் 4.5 லட்சம் மக்கள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா... 

ஆந்திராவின் அண்டை மாநில மான தெலுங்கானாவின் ஹைதரா பாத், நல்கொண்டா மற்றும் கம்மம் ஆகிய பகுதிகளும் கனமழை வெள்ளத்தால் கடுமையான சேதத்தை எதிர்கொண்டுள்ளன. ஆந்திரா, தெலுங்கானா இரு மாநிலங்களிலும் வெள்ள மீட்புப்பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை காரண மாக தென் மத்திய ரயில்வே 432 ரயில்களை முழுவதுமாக ரத்து  செய்துள்ளது. சென்னை, கோவை, திருவனந்தபுரம் மார்க்கங்க ளில் செல்லும் பல ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

32 பேர் பலி...

இரண்டு மாநிலங்களிலும் கடந்த 3 நாட்களில் மட்டும் கன மழை வெள்ளத்தால் 32 பேர் உயி ரிழந்துள்ளனர். மேலும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. 

டிரோன் மூலம் உணவு

விஜயவாடாவில் பல இடங்க ளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். விஜயவாடா சிங்க் நகர் முற்றி லுமாக வெள்ளத்தால் சூழப்பட் டுள்ளது. இதனால் அப்பகுதியில் வீடுகளில் முடங்கியுள்ள மக்களு க்கு டிரோன் மூலம் உணவு பொட்ட லங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.