கரூர், மே 8- கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க் கிழமை மாலை தளவாபாளையம், புகழூர் கஸ்பா சர்க்கரை ஆலை சந்திப்பு, ஆலமரத்துமேடு, புன்னம் சத்திரம் பேருந்து நிறுத்தம், குப்பம், ஆரியூர், நஞ்சைகாளக்குறிச்சி, ராஜ புரம் ஆகிய பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:ஆட்சியில் இல்லாமல் இருந்தா லும் உங்களுக்காக பாடுபடும் இயக்கம்தான் திமுக. ஏற்கனவே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை அகற்ற கரூர் தொகுதிக்கு நமது கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளித்தீர்கள். தமிழகத்தில் இருக்கும் அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரமே 19-ம் தேதி நடக்கும் சட்ட மன்ற இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜிக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இந்த அரவக்குறிச்சி தொகுதிஓராண்டுக்கு மேலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி இல்லாத தொகுதியாக இருந்துவந்தது. உங்களால் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட செந்தில்பாலாஜி யின் பதவியை பறிக்க காரணமாக இருந்தவர் முதல்வர் பழனிசாமி. அவரை மாற்ற வேண்டும் என ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைத்ததால்தான், செந்தில்பாலாஜி யோடு, 18 எம்எல்ஏக்களின் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால்தான் இந்த இடைத்தேர்தல் தற்போது நடத்தப்படுகிறது.
செந்தில்பாலாஜியை நீங்கள் தேர்ந்தெடுத்தால், கரூர் ஊராட்சி ஒன்றியம் புகழூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும், அரவக்குறிச்சி தொகுதியில் கலை அறிவியல் கல்லூரிஅமைக்கப்படும். புஞ்சைத்தோட்டக் குறிச்சி பகுதியினருக்கு குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும். ஒரத்தை,தளவாபாளையம் பகுதி விவசாயி களுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். டிஎன்பிஎல் ஆலை ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். இதேபோல திமுக தேர்தல் அறிக்கையான கிராமப்புற மகளி ருக்கு ரூ.50,000 வரை வட்டியில்லா கடன், 10-ம் வகுப்பு படித்த 1 கோடி பேருக்கு சாலைப் பணியாளர் பணி வழங்கப்படும். கேபிள் கட்டணம் திமுக ஆட்சியில் இருந்தது போல ரூ.100 என நிர்ணயிக்கப்படும். அனைத்து விவசாயிகள் கடன் தள்ளு படி, மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். அரவக் குறிச்சி தொகுதியில் 25,000 பேருக்கு இலவச வீட்டுமனை வழங்க செந்தில்பாலாஜி அறிவித்திருப்பது போல, இந்த திட்டம் தமிழகம் முழுவதும் நிறைவேற்றப்படும். இவை யெல்லாம் நிறைவேற்றிட திமுக வெற்றி பெற வேண்டும். அதிமுக ஆட்சியில் மக்கள் யாருக்கும் பாதுகாப்பில்லை.மே 19-ம் தேதி நடக்கும் தேர்தலில் செந்தில்பாலாஜிக்கு வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பிரச்சாரத்தில் வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி, கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி, மார்க் சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.