இந்தியாவின் புதிய தலைமைத்தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றுள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இருந்து வருகிறார். அவருடைய பதவி காலம் நாளை முடிவடைகிறது. இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுஷில் சந்திராவை புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமித்துள்ளார்.
சுஷில் சந்திரா தற்போது தேர்தல் ஆணையராக பதவியில் இருந்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் தேர்தல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இந்த பணியில் இருந்து வந்த நிலையில் இப்போது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடைய பதவிக்காலம் 2022 மே 14-ந் தேதி வரை உள்ளது.