சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் மே 31ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து, அனுமதி பெற்ற விமான சேவைக்கு எந்தத் தடையும் இல்லையென்றும், அவை வழக்கம்போன்று செயல்படலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.