india

img

இந்தியாவில் ஒரே நாளில் 168912 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,35,27,717 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,70,179 ஆக உயர்ந்துள்ளது. 
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 75,086 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,21,56,529 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 12,01,009 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் நேற்று வரை 10,45,28,565 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

;