தில்லியில் இன்றிரவு முதல் ஒரு வாரம் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில், தலைநகர் தில்லியில் இன்று இரவு 10 மணி முதல் ஏப்ரல் 26 காலை வரை தொடர்ந்து ஒரு வாரம் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, வார இறுதி நாள்களில் ஊரடங்கு உள்ள நிலையில், அதனை ஒரு வாரமாக நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.