india

img

குஜராத்தில் சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி

குஜராத்தில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் தாராபூர் நெடுஞ்சாலையில்  சூரத்திலிருந்து பாவ்நகர் நோக்கி  இன்று அதிகாலை காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த  10பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரும் டிரக்கும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு உயிரிழந்தவர்களை அடையாளங்களை காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;