india

img

தெலுங்கானாவில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு

ஐதராபாத், ஜன.08-
தெலங்கானாவில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்களை திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தெலுங்கானாவில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

;