india

img

ஒமிக்ரான் அச்சுறுத்தல்: சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைப்பு

இந்தியாவில் டிசம்பர்-15 முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவை தொடங்க இருந்த நிலையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விமானச் சேவைகள் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் தொடங்கும் என விமான போக்குவரத்துத் துறை கடந்த  நவம்பர்-26 அன்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று நவம்பர்-30 நள்ளிரவு இந்திய விமான போக்குவரத்துகள் தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் செல்ல தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக சர்வதேச பயணிகள் விமான சேவையை ஒத்திவைப்பதாக விமான போக்குவரத்துத் துறை அறிவித்திருக்கிறது.

மேலும், ஒமிக்ரான் பாதிப்புள்ள தென்னாப்பிரிக்கா, சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, ஜிம்பாவே, சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருவோர்க்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

;