ஆதித்யா பிர்லா குழுமத்தின் முதன்மை நிறுவனங்களில் ஒன்றான அல்ட்ரா டெக் சிமெண்ட் உற்பத்தி நிறுவனம், தென்னிந்தியா வின் மிகப் பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவன மான இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட்டை விழுங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் பெருவாரி யான பங்குகளை கையில் வைத்திருந்த உரிமை யாளர்களான தமிழ்நாட்டின் பிரபல தொழிலதி பர் என்.சீனிவாசன், சித்ரா சீனிவாசன், ரூபா குருநாத், எஸ்.கே.அசோக் பாலாஜி ஆகியோர் தங்கள் வசமிருந்த அனைத்துப் பங்குகளையும் ஆதித்யா பிர்லா குழுமத்திடம் விற்றுவிட்டு சிமெண்ட் தொழிலை விட்டே வெளியேறியுள்ள னர். மேலும் சில பங்குகளை வைத்திருந்த ஸ்ரீசாரதா லாஜிஸ்ட்டிக்ஸ் எனும் நிறுவனமும் பிர்லா குழுமத்திடம் பங்குகளை விற்றுவிட்டது. மொத்தம் ரூ.3,954 கோடி விலை கொடுத்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை கபளீகரம் செய்துள்ளது பிர்லா குழுமம்.
உலகில் சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. உள்நாட்டி லேயே மிகப் பெரிய சந்தை இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்திய சிமெண்ட் சந்தையின் மதிப்பு 2685 கோடி டாலர். சிமெண்ட் உற்பத்திக்கான மூலப்பொருளான சுண்ணாம்புக் கல் இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் தாராளமாகக் கிடைக்கிறது. உலகிலேயே இந்திய சுண்ணாம்புக்கல் தான் அதிகத் தரம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக மற்றும் மோடியின் கூட்டுக்களவாணி முதலாளியான கவுதம் அதானி, கடந்த பத்தாண்டு களில் கால் வைக்காத துறையே இல்லை என லாம். துறைமுகங்கள் உட்பட ஒவ்வொரு துறை யிலும் அதானி குழுமம் நுழையும் போது, சிறிய, நடுத்தர, பெரிய நிறுவனங்கள் அதானி குழுமத்தால் அப்படியே விழுங்கப்படுகின்றன. பிராந்திய அள விலான உற்பத்தி நிறுவனங்களை விலை கொடுத்து வாங்கி தனதாக்கிக் கொள்ளும் அதானி குழு மம் பெரு ஏகபோக சக்தியாக வளர்ந்து வருகிறது. இது, இந்திய தொழில்துறையில் ஏற்கெனவே கோலோச்சிக் கொண்டிருக்கும் டாடா, பிர்லா உள்ளிட்ட குழுமங்களுக்கு அதிர்ச்சியை உரு வாக்கியுள்ளது. இதன் விளைவாக இந்திய பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் இடையே முரண்பாடும் போட்டியும் ஏற்பட்டுள்ளது. சந்தையை கைப் பற்றும் இந்தப் போட்டியில், இடையில் இருக்கும் பல நிறுவனங்கள் விழுங்கப்படுவது, தொழிலில் இருந்தே வெளியேற்றப்படுவது போன்ற நிகழ்வு கள் தீவிரமடைந்துள்ளன.
இதன் ஒரு பகுதியாகவே, சிமெண்ட் துறையில் நுழைந்த அதானி நிறுவனம் சமீப மாதங்களில் பல பிராந்திய சிமெண்ட் நிறுவனங்களை விலைக்கு வாங்கியது. அதற்கு போட்டியாக சமீப மாதங்களில் ஆறு சிமெண்ட் நிறுவனங்களை கையகப்படுத் திய பிர்லா குழுமம் தமிழ்நாட்டின் இந்தியா சிமெ ண்ட்சை கைப்பற்றியுள்ளது. இது மேலும் தொட ரும். இந்தியத் தொழில்கள் மேலும் மேலும் மெகா கார்ப்பரேட்டுகளின் கைகளில் குவிகின்றன. ஏக போக சக்திகள் வேகமாக வளர்கின்றன.