ஆடவர் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று இரண்டு பிரிவாக நடைபெற்றது. “குரூப் ஏ” பிரிவில் இடம்பெற்றிருந்த நீரஜ் சோப்ரா சிரமமின்றி இறுதிக்கு முன்னேறினார். “குரூப் ஏ” பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த செக்குடியரசின் ஜேக்கப் (85.23), நீரஜ் சோப்ராவிற்கு (88.39 மீட்டர்) பெரியளவில் போட்டி அளிக்க வில்லை. ஆனால் “குரூப் பி” பிரிவில் கிரெணடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் அப்பிரிவில் 89.91 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடத்துடன் இறுதிக்கு முன்னேறினார். அதே போல ஜெர்மனியின் ஜூலியன் 87.28 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஆண்டர்சன் இந்தியாவின் நீரஜ் சோப்ராவை விட கூடுதலான தூரத்தில் ஈட்டியை வீசியுள்ளார். ஜெர்மனியின் ஜூலியனும் சோப்ராவை நெருங்கிய தூரத்திலேயே ஈட்டியை வீசியுள்ளதால், இறுதிச்சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா மிகவும் கடினமான போட்டியை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேற்கூறிய 3 போட்டியாளர்கள்தான் நீரஜ் சோப்ராவிற்கு சிக்கல் உருவாக்கக்கூடியவர்கள். மற்ற 8 நபர்கள் சற்று சாதாரண வகையில் போட்டி அளிக்கக்கூடியவர்கள். எனினும் ஜப்பான் ஒலிம்பிக் தொடரில் தங்கம் வென்ற உத்வேகத்துடன் நீரஜ் சோப்ரா என்ன பதக்கம் வெல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஎன்பிஎல் இன்றைய ஆட்டம்
கோவை - திருநெல்வேலி
இடம் : எஸ்சிஎப் மைதானம், சேலம்
நேரம் : இரவு 7:15 மணி