games

img

கரை கடந்த வேகப் புயல்: மாறாத சுவடுகள்!

‘‘முடிவு என்னவானாலும் பரவாயில்லை. போய் ஓடு.. என்று தைரியம் கொடுக்கிறார் தாய். மறு பேச்சு இல்லை. ஓடுகிறார். முதல் இடத்தை பிடிக்கிறார். கோப்பையுடன் திரும்புகிறார். அந்தத் தாய் சந்தோஷத்தில் உலகையே மறந்தாள்’’. இந்த நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்றாலும் என்றைக்கும் சாத னையாளர்களுக்கு உந்து சக்தியாகும்.

பிறப்பும்-இளமையும்

அந்த நாட்டின் மொத்த பரப்பளவு 10,991 சதுர கி.மீ. (4,244 சதுர மைல்கள் தூரம்). 529 ஆண்டுகளுக்கு முன்பு (1494 ஆம் ஆண்டு) கிழக்கிந்திய தீவுகளை தேடப் புறப்பட்டபோது, கரீபியன் கடலில் கண்டுபிடித்த ஒரு குட்டி தீவு ஜமைக்கா.  இரவு ஏழு மணி தாண்டினால் கடிகார முள்ளின் ஓசை கேட்கக்கூடிய அமைதி குடிகொள்ளும் அழகிய ஓர் கிராமம். பசுமையான காடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. அந்த காலத்தில் மளிகை கடை நடத்தி  வந்த வெல்லஸ்ஸ லீ போல்ட்-ஜெனிஃபர் தம்பதிக்கு மூன்று குழந்தைகள். இவர்களில் உசைன் செயின் லியோ போல்ட்டும் ஒருவர். ஆண் குழந்தை என்பதால் நம்ம ஊரைப் போன்று கூடுதல் மகிழ்ச்சி தான். அந்தக் குழந்தை வளர வளர சுட்டித் தனமும் வளர ஆரம்பித்தது. வயதுக்கு மிஞ்சிய உயரம். வீட்டை விட்டு காடுகளுக்குள் திரிவது, பள்ளத் தாக்குகள், மலைகளின் உச்சியில் இருந்து குதிப்பது என்று அபாயகரமான செயல்பாடுகள் அதிகரித்தது. அதுவே பொழுது போக்கு என்றாலும் அந்த மனிதன் தான் ‘மின்னல் வேக மனிதன்’ என்று உலகம் கொண்டாடும் தடகள வீரர் உசைன் போல்ட்.

ஆரம்பகால சாகசங்கள்

தேசிய அளவில் 2001-ஆம் ஆண்டு முதன் முதலாக 400 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தை துவக்கிய உசைன் போல்ட் வெள்ளிப் பதக்கம் வென்றார். அடுத்த ஆண்டு, உலக இளையோர் தடகளத்தில் 200 மீட்டர் தூரத்தை 20.61 நிமிடத்தில் கடந்து முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும் மிக இளம் வயதில் குறைந்த தூரத்தில் இலக்கை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

சாதனைகளின் பிறப்பிடம்

பள்ளிப் பருவத்தில் முழு கவனமும் விளையாட்டு மீது இருந்தது. ஓட்டப் பந்தயத்தில் பல பதக்கங்களை வென்றா லும் கிரிக்கெட், கால்பந்தில் அதிகம் ஆர்வம். கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும் என்பதே விருப்பம். ஆனால், அவரிடம் இருந்த திறமையை பார்த்த பள்ளியின் விளை யாட்டு ஆசிரியர், தடகளப் போட்டியில் கவனம் செலுத்த அறிவுறுத்தி இருக் கிறார். ஆனால், அவர் கிரிக்கெட்டை கைவிட விரும்பவில்லை. தந்தையின் அறிவுரையை ஏற்று தடகளப் பக்கம் திரும்பினார். அப்போது வயது 15.

8 ஒலிம்பிக் பதக்கங்கள்

ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்வது பலருக்கும் எட்டாக் கனியாக இருக்க, இவரோ 8 பதக்கங்களை அள்ளி வந்தார். தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டி களில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற ஒரே வீரர் இவர்தான். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றவரும் இவரே. 2008-ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் தொடர்தான் அவர் பங்கேற்கும் முதல் போட்டியும் கூட. ஓட்டப்  பந்தயத்தில் 100 மீட்டரை 9.69 நொடி களில் கடந்து உலகின் ‘வேகமான மனி தன்’ என்ற பட்டத்தை தட்டி தூக்கினார். தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டி களில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர்  ஓட்டங்களில் தங்கப் பதக்கம் வென்ற  வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார். 2012-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில், 100 மீட்டர் தூரத்தை 9.63 வினாடியில் எட்டி தன்னுடைய முந்தைய சாதனையை அவரே முறியடித்து புதிய வரலாறு படைத்தார். அமெரிக்க வீரர் மைக்கேல் ஜான்சனின் 12 ஆண்டுகால சாதனையை தகர்த்து, உலகின் அதிவேக ஓட்டப்பந்தய ‘அசுரன்’ என்பது அன்றைக்கு தான் உலகம் முழுவதும் ஒலிக்க தொடங்கியது.

31 வயதில் ஓய்வு

2017-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை சாம்பியன் போட்டியுடன் தனது 31 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுதான் அவரது கடைசி  ஓட்டம் என்பதால் உலகமே உற்று  நோக்கியது. 100 மீட்டர் ஓட்டப்பந்த யத்தில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கட்லின் முதலிடத்தையும், சக நாட்டு வீரர் கிறிஸ்டியன் இரண்டாவது இடத்தை யும் பிடிக்க உலகின் அதிவேக மனிதன்  உசைன் போல்ட் மூன்றாவது இடத்திற்கு  தள்ளப்பட்டு ஏமாற்றத்துடன் விடை பெற்றார்.  உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட், உலகமே வியந்து பார்க்கும் உச்சபட்ச சாதனைகள் பலவற்றை படைத்தவர். இந்த மின்னல் வேக ஆட்டக்காரர் 10 வினாடிக்குள் 100 மீட்டர் பந்தய தூரத்தை கடக்க பகல், இரவாக மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். இருந்தாலும் இதுவரை அவரது சாதனையை ஒருவ ராலும் முறியடிக்க முடியவில்லை. இந்தப் புயல் கரை கடந்தாலும் அதன்  சுவடுகள் காலத்திற்கும் அழியாமல் இருக்கும் என்பதில் எள்ளளவும்  சந்தேகம் இல்லை. ஓட்டப்பந்தய உல கில் புதிய அத்தியாயத்தை உருவாக்கிய உசைன் போல்ட் ஆகஸ்ட் 21 அன்று தனது 37-ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.

- சி. ஸ்ரீராமுலு