games

img

விளையாட்டு செய்திகள்

இந்தியன் வேல்ஸ் டென்னிஸ்

காலிறுதியில் வொஸ்னியாக்கி
சர்வதேச டென்னிஸ் உலகில் முக்கிய தொடர்களில் ஒன் றான இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்று வருகிறது. 

தற்போது இந்த தொடரில் 4-ஆவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், புதனன்று நடைபெற்ற மக ளிர் ஒற்றையர் பிரிவு 4-ஆவது சுற்று  ஆட்டத்தில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம்  சாம்பியனான டென்மார்க்கின் கரோ லின் வொஸ்னியாக்கி, ஜெர்மனியின் கெர்பரை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த  ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வொஸ்னியாக்கி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். 

இதே பிரிவில் மற்றொரு 4-ஆவது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசை யில் முதலிடத்தில் உள்ள போலந்தின் ஸ்வியாடெக், 6-1, 6-2 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் யுலாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற் றார். ரஷ்ய வீராங்கனை அனஸ்டாசி யாவை 6-4, 6-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் உக்ரைனின் கோஸ்டிக்.

அல்காரஸ் முன்னேற்றம்

ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-ஆவது சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் அல்காரஸ், தரவரிசையில் இல்லாத ஹங்கேரியின் பாபியனை 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

உலகத் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் சின்னர் 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 16-ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் செல்டானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். தரவரிசையில் 6-ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜுவரேவ் 5-7, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் டி மினாரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

புதுதில்லி
டபிள்யு.பி.எல் 2024
லீக் ஆட்டங்கள் நிறைவு

இரண்டாவது சீசன் டபிள்யு.பி.எல் (WPL - Women’s Premier League) டி-20 கிரிக்கெட் லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலை யில், புதனன்று லீக் ஆட்டங்கள் நிறைவுபெற்றன. 

லீக் ஆட்டங்களின் முடிவில் தில்லி, மும்பை, பெங்களூரு ஆகிய அணிகள் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், வெள்ளியன்று எலிமினேட்டர் ஆட்டங்கள் தொடங்க உள்ளன. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த அணி நேரடியாக இறுதிக்கு முன்னேறும் என்ற நிலையில், எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிக்கு தகுதி பெறும். இறுதி ஆட்டம் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன்
வெளியே கசியாத ஸ்லெட்ஜிங்

இங்கிலாந்து அணி 5 போட்டி களைக் கொண்ட டெஸ்ட் தொட ரில் பங்கேற்க கடந்த ஜனவரி மாதம் இந்தியாவிற்கு வந்தது. ஒருநாள், டி-20 தொடரை போல பரபரப்பாக நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில்கைப்பற்றியது. 

இந்நிலையில், இமாச்சலப்பிர தேச மாநிலம் தரம்சாலாவில் நடை பெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர்  பேட்டர் சப்மன் கில்லுக்கும், எனக்கும் மோதல் ஏற்பட்டதாக இங்கி லாந்து அணியின் மூத்த பந்துவீச்சாளர் ஆண்டர்சன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக இஎஸ்பிஎன் விளையாட்டு தொலைக்காட்சிக்கு ஆண்டர்சன் அளித்த பேட்டியில்,”இந்தியாவுக்கு வெளியே நீங்கள் ஏதேனும் ரன்கள் எடுக்கிறீர்களா?” என கில்லிடம் கேட்டேன். அதற்கு கில், “ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது” என பதிலடி  கொடுத்தார். அடுத்த 2-ஆவது பந்தில் நான் கில்லை வெளியேற்றி னேன்” எனக் கூறினார்.  இந்த விவகாரம் பற்றி போட்டியின் பொழுது எந்த தகவலும் வெளியாகாத நிலையில், ஆண்டர்சன் கூறிய பின்பே  வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.