games

img

விளையாட்டு...

தேசிய த்தே போட்டி சென்னை அரசுப் பள்ளி மாணவி சாதனை!

தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையே யான கராத்தே போட்டியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த சென்னைப் பள்ளி மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சென்னை அசோக் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி அ.ச. நித்திலா.  இவரது தந்தை சம்பத் குமார் உலக அளவில் கராத்தே போட்டி யின் நடுவர் மற்றும் புகழ்பெற்ற கராத்தே பயிற்சியாளர். இத னால், குழந்தை பருவத்தில் இருந்து (3 வயது) கராத்தே பயிற்சி பெற்று வருகிறார் நித்திலா. சிறு  வயதில் இருந்து உள்ளூர் போட்டி களில் பங்கேற்று பரிசுகளை வென்ற தால் நம்பிக்கை அதிகரித்தது. பின்னர்,  மாவட்ட மற்றும் மாநில அளவில் பள்ளி  மாணவர்களுக்கான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளைக் குவித்தார்.

காரைக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளிக் கல்வி குழும விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவி நித்திலா, 46 கிலோ எடை பிரிவில் பங்கேற்று முதலிடம் பிடித்து மாநிலத்தின் முதல் வெற்றியாளராக தங்கம் வென்றார். இந்த பிரிவில் 252  மாணவர்கள் போட்டியிட்டது குறிப்பிடத் தக்கது. இந்தியா ஓபன் கராத்தே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற  நித்திலா படிப்பிலும் சுட்டி. பள்ளியின்  ஆசிரியர்கள் அனைவரும் நித்திலாவின் விளையாட்டு ஆர்வத்திற்கு ஊக்கம் அளிக்கின்றனர்.

இந்நிலையில்தான், தமி ழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டிற் கும் பெருமை சேர்த்து  இந்தியத் தாயின் தவப் புதல்வியாய், விடு தலைப் போராட்டத் தியாகி பகத்சிங்கின் மண்ணான பஞ்சாப்  மாநிலத்தின் லூதியானாவில் நடைபெற்ற 68 ஆவது இந்திய அளவிலான பள்ளிக் கல்விக் குழும விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த கராத்தே போட்டியில் தமிழ்நாடு மாநில அணியைத் தலைமையேற்று வழி நடத்தியதுடன், 46 கிலோ தனிநபர் பிரிவில் நித்திலா களம்  இறங்கினார்.

வழக்கம்போல் இந்த போட்டியில் தனது முழு திறமைகளையும் வெளிப்படுத்தினார். எதிரில் களம் கண்ட வீராங்கனையை மிக எளிதில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் தங்கம் வென்று தமிழ்நாடு மாநில அரசுப் பள்ளிகளின் முதல் மாணவி என்ற பெருமைக்கு சொந்தமானார்.

இதுவரை தனியார் பள்ளி களான சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மெட்ரிகு லேஷன் ஆகியப் பாடத் திட்ட பள்ளி கள் மட்டுமே தட்டிப் பறித்துக் கொண்டி ருந்த கராத்தே பிரிவு தங்கப் பதக்கத்தை, சென்னை கலைஞர் கருணாநிதி நகரின் அசோக் நகர் பகுதி  அரசுப் பள்ளி மாணவி அ.ச.நித்திலா முதல் முறையாக வென்றுள்ளார்.

குவியும் பாராட்டுக்கள்

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் அரசுப் பள்ளி மாணவி நித்திலாவிற்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பாராட்டு தெரி வித்திருக்கிறது.

தங்கம் வென்ற மாணவி அ‌.ச. நித்திலாவுக்கு, பெற்றோர் அஸ்வினி - சம்பத்குமார், அரசுப் பள்ளித் தலை மையாசிரியர், ஆசிரியர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுப் பள்ளிக் கான மாநில மேடை தலைவர் முனைவர்  பி. இரத்தினசபாபதி, பொதுச்செயலா ளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சி மாணவராக இருந்த போதே தமிழ்நாட்டில் மிகச் சிறந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் பணி புரிந்த மிகப்பெரும் களச் செயல்பாட்டாளராக உள்ள மாணவியின் அம்மா அஸ்வினி,  தந்தை சம்பத்குமார் இருவரும் அம்பேத் கர், பெரியார் ஆகியோரின் சமத்து வத்திற்கான போராட்டத்தை உள்வாங் கிய தொழிலாளர் வர்க்கத்தில் பிறந்த வர்கள். இதனால், அரசுப் பள்ளிகள்  மட்டுமே கண்ணியமிக்க குழந்தைப்  பருவத்தை ஒரு குழந்தைக்கு உறுதி செய்ய முடியும் என்பதை உணர்ந்து, தங்களின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள அரசுப் பள்ளியில் தங்களது மகளை சேர்த்துப் படிக்க வைத்தனர். மேலும், தங்களது சொந்த வாழ்க்கை யில் வேலை வாய்ப்புகளை உரு வாக்கிக் கொண்டனர். தங்களது திரு மணத்தின் மூலம் சாதியை மறுத்து,  மனிதம் காத்தனர், சுயமரியாதைக்கா ரர்கள் என்பதை நிரூபித்தனர் என்று கூறியுள்ளனர்.