games

img

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் நியமணம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 0 – 4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்ததைத்தொடர்ந்து, தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கிறிஸ் சில்வர்வுட் நீக்கப்பட்டார். மேலும், கேப்டன் பொறுப்பிலிருந்து ஜோ ரூட்டும் விலகினார். இதன்பின் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டாக்ஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தலைமை பயிற்சிபாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் பிரெண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், இங்கிலாந்தின் டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 அணிகளுக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் செயல்படவுள்ளனர். தற்போது பிரெண்டன் மெக்கல்லம் ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். கரீபியன் பிரீமியர் லீக்கில் ட்ரின்பாகோ நெட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.

இச்சூழலில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்பதால், நடப்பு ஐபிஎல் சீசனுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மெக்கல்லம் விரைவில் விலகுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.