லண்டன் புற்கள் இல்லாமல் பேஸ்லைன் தெரியவில்லை சிரமப்படும் வீரர் - வீராங்கனைகள்
பாரம்பரியமிக்க டென்னிஸ் தொட ரான விம்பிள்டன் தொடரின் 146-வது சீசன் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. 1877இல் எப்படி தொடங்கப்பட்டதோ அந்த பாரம்பரிய விதிகளை மாற்றா மல் அப்படியே பின்பற்றி வரு கிறது விம்பிள்டன் நிர்வாகம். அதாவது வெள்ளை உடை, ஆடைக்கட்டுப்பாடு, விளம்பர பேனர் இல்லா மைதானம், செயற்கை இல்லா இயற்கை புல்வெளிகள் என தற்போதைய நவீன காலத்தில் அப்படியே பின்பற்றப்பட்டு வருகிறது. மற்ற பாரம்பரிய விதிகள் எல்லாம் நடைமுறையில் சாதகமான சூழலை உருவாக்கினாலும், இயற்கை புல்வெளிகள் சற்று சிக்கலை ஏற்படுத்துகிறது. காரணம் வீரர் - வீராங்கனை கள் ஓடும் பகுதியான பேஸ்லைன் பகுதியில் புற்கள் தனது வேர்களை இழந்து, இறந்து விட்டதால் வெட்டவெளி பகுதி யாக உள்ளது. பேஸ்லைன் பகுதி சென்டர் மார்க் சரிவர தெரியாததால் வீரர் - வீராங்கனை கள் கணிப்புடன் ஷாட்களை விளாச முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்தியா - மேற்கு இந்திய தீவுகள்
(முதல் டெஸ்ட்- 3வது நாள்)
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : வின்ட்சோர் பார்க், டோம்னிகா
சேனல் : தூர்தர்சன் (அனைத்து மொழிகளிலும்),
ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)
விம்பிள்டனில் இன்று...
ஆடவர் ஒற்றையர் - அரையிறுதி ஆட்டம்
மகளிர் ஒற்றையர் - விடுமுறை
ஆடவர் இரட்டையர் - இறுதி ஆட்டம் (தோராயமாக)
மகளிர் இரட்டையர் - அரையிறுதி ஆட்டம்
5 செட்கள் போராடியும் 2:58 மணிநேரத்தில் நிறைவுபெற்ற ஆட்டம்
பொதுவாக டென்னிஸ் விளையாட்டில் ஒரு போட்டி 3 செட்களுக்கு மேல் சென்றால் கிட்டத்தட்ட 3 மணிநேரத்திற்கு மேல் ஆகும். 5 செட் போராடினால் 4 மணிநேரத்திற்கு மேல் ஆட்டத்தின் நேரம் நீண்டு கொண்டே இருக்கும். ஆனால் நடப்பு சீசன் விம்பிள்டன் தொடரின் ஆடவர் காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் மெத்வதேவ் - அமெரிக்காவின் இயூபங்ஸ் மோதினர். இந்த ஆட்டம் 5 செட்கள் வரை நீண்ட நிலையில், ரஷ்யாவின் மெத்வதேவ் 6-4, 1-6, 4-6, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் கடும் போராட்ட த்துடன் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த ஆட்டம் 5 செட்கள் வரை நீண்டாலும் வெறும் 2:58 மணிநேரத்தில் நிறைவடைந்தது டென்னிஸ் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
உங்களுக்கு தெரியுமா?
உலகில் மிக அதிக நேரம் நடைபெற்ற டென்னிஸ் போட்டி என்ற சிறப்பை கடந்த 2010இல் நடைபெற்ற விம்பிள்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டம் பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் - பிரான்சின் நிக்கோலஸ் மஹுத் ஜோடி 11:05 மணிநேரம் போராட்டத்துடன் விளையாடினர். நேரமின்மையால் போட்டி அடுத்த நாள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், இந்த ஆட்டத்தில் 6-4, 3-6, 6-7, 7-6, (70-68) என்ற செட் கணக்கில் ஜான் இஸ்னர் வெற்றி பெற்றார்.
டோமினிகா டெஸ்ட் : நகர மறுக்கும் பந்து
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் டோமினிகாவில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் சீரான அளவில் புற்கள் இல்லாமல் இருப்பதால் பந்துகள் பவுண்டரி எல்லை செல்ல மறுக்கின்றன. அதாவது பந்து உருளாமல் புற்களிலேயே சுருண்டு கொள்கின்றன. ஆட்டம் முடிந்தவுடன் இந்த மைதானத்தை சர்வதேச கிரிக்கெட் வாரியம் ரிப்போர்ட் செய்ய வாய்ப்புள்ளது.
விரக்தியால் ரசிகர்கள் வரவில்லை
இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டத்தை காண குறைவான அளவிலேயே ரசிகர்கள் வந்தனர். கிட்டத்தட்ட 35% ரசிகர்கள் மட்டுமே ஆட்டத்தை காண வந்தனர். காரணம் கிரிக்கெட் “உலகின் முக்கிய சாம்பியன்” என்ற சிறப்பு பெயரை கொண்டுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரின் தகுதி சுற்றில் வெளியேறியதால் அந்நாட்டு ரசிகர்கள் விரக்தியால் ஆட்டத்தை காண வரவில்லை.