ஆசிய கோப்பை, டி-20 உலகக் கோப்பை (2022) தொடர்களில் ஏற்பட்ட அடுத்தடுத்த தோல்வி காரண மாக இந்திய அணியின் தேர்வாளர் குழு (சேத்தன் சர்மா தலைமையிலான) சமீபத்தில் கலைக்கப்பட்டது. அணி தேர்வு விஷயத்தில் பல்வேறு சர்ச்சை ஏற்பட்டதால் புதிய தேர்வு குழுவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரி யம் (பிசிசிஐ) அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் சேத்தன் சர்மாவை தலைவராக கொண்டு சற்று மாறுபட்ட தேர்வு குழுவை உருவாக்கியது பிசிசிஐ. இந்த விவகாரத்தில் பிசிசிஐ-யின் செயல்பாடு பெரும் விவாத பொருளாக மாறியது. ஆனால் பிசிசிஐ தரப்பில் சேத்தன் சர்மா விவகாரத்தில் விளக்கம் அளிக்கவில்லை. இந்த விவகாரம் இன்று வரை சர்ச்சை செய்தியாகவே உள்ள நிலையில், சேத்தன் சர்மாவால் மேலும் ஒரு பிரம்மாண்ட சர்ச்சை வெடித்துள்ளது. இந்த புதிய சர்ச்சை யால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒட்டுமொத்த மானம் கப்பலேறிவிட்டது.
சத்தமில்லாமல் பிசிசிஐ-க்கு செக் வைத்த ஜீ நியூஸ்
தற்போதைய நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக ரோஜர் பின்னி உள்ளார். ஆனால் முக்கிய முடிவுகள், அதிகார உத்தரவுகள், பொறுப்புகள் கிட்டத்தட்ட இந்திய கிரிக்கெட் வாரியமே பிசிசிஐ செயலா ளர் ஜெய் ஷாவின் (ஒன்றிய அமைச்சர் அமித் ஷா மகன்) உள்ளது. ஜெய் ஷாவிடம் கையில் பிசிசிஐ பொறுப்பு கொடுக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள், பல ரகசியமான செயல்பா டுகள் இந்திய கிரிக்கெட் உலகில் என்ன நடக்கிறது என்பதே அறிய முடியாமல் இருந்தது. கிட்டத்தட்ட பிசிசிஐ-யிலிருந்து எந்த தகவலையும் பெற முடியாத படி ஒரு மர்ம குகை போன்று இருக்கும் நிலையில், இந்த மர்மகுகையின் தகவலை கண்டறிய தொடக்க புள்ளி வைத்துள்ளது நாட்டின் முன்னணி செய்தி நிறுவனமான ஜீ நியூஸ். ஜீ நியூஸ் இந்திய கிரிக்கெட் அணியின் பல்வேறு ரகசியங்களை புல னாய்வு செய்தி மூலம் வெளியிட்டுள் ளது. ரகசியங்களை வாங்குவதற்காக இந்திய அணியின் தலைமை தேர்வுக் குழுத்தலைவர் சேத்தன் சர்மாவிடம் “ஸ்டிங் ஆபரேஷன்” மூலம் போட்டு வாங்கியுள்ளது.
“ஸ்டிங் ஆபரேஷன்” - சேத்தன் சர்மா உளறல்
இந்த ஸ்டிங் ஆபரேஷனில் சேத்தன் சர்மா உளறிக்கொட்டிய சில விஷயங் களை மட்டுமே ஜீ நியூஸ் வெளி யிட்டுள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் 50% ரகசியங் களும் வெளியாகியுள்ளது. ஸ்டிங் ஆபரேஷனில் சேத்தன் சர்மா கூறியதாவது,”இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா இடையே மோதல்கள் இல்லை. ஆனால் ஈகோ இருக்கிறது. கங்குலி, ரோஹித் சர்மா விற்கு ஆதரவாக எல்லாம் செயல்பட வில்லை. ஆனால் கங்குலி கோலியை எப்போதுமே விரும்பியது இல்லை. முக்கியமாக இந்திய அணியில் சில கிரிக்கெட் வீரர்கள் பிட்டாக (வலு வான உடல்வாகு) இல்லை. காரணம் இந்திய வீரர்கள் வெறும் 80% உடல் தகுதியோடு இருக்கும் போதே ஊசி போடுகிறார்கள். வெறுமனே ஊசி போட்டுவிட்டு விளையாட தொடங்கி உள்ளனர். ஆனால் இந்திய வீரர்கள் பெயின் கில்லர்கள் (வலி நிவாரணம்) எடுப்பது இல்லை. அவர்கள் பெயின் கில்லர் எடுத்து இருந்தால் அது ஊக்க மருந்து போல ஆகிவிடும் என்பதால் தவிர்த்து விட்டனர். கோலி கேப்டன்சி யில் இருந்து நீக்கியதில் கங்குலிக்கு பங்கு இருப்பதாக கோலி நினைக் கிறார். ஆனால் பிசிசிஐ கூட்டத்தில் 9 பேர் இருந்தனர். அப்போது கங்குலி கோலியை கேப்டன்சியில் இருந்து விலக வேண்டாம். ஒரு முறை யோசித்து பாருங்கள் என்று கூறி இருக்கலாம். ஆனால் அதை கோலி காதில் வாங்கா மல் போய் இருக்கலாம் என்றெல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்.
இனிமேலாவது வெளிப்படைத் தன்மை இருக்குமா?
சேத்தன் சர்மாவின் உளறலால் பிசிசிஐ-யை கிரிக்கெட் உலகம் கடுமை யாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு உலகக் கோப்பைக்கு முன்பாக புதிய தேர்வு கமிட்டியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவ தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சேத்தன் சர்மாவின் உளறலால் வீரர் - வீராங்கனைகள் தேர்வில் வெளிப்படை த்தன்மை ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஸ்டிங் ஆபரேஷன் காரண மாக இந்திய அணியின் மரியாதை தரைகுறைவாக விமர்சிக்கப்பட்டா லும், ஒரே நல்ல விஷயம் தேர்வுக் குழுவில் வெளிப்படைத்தன்மை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்கு சிக்கல்
ஸ்டிங் ஆபரேஷனில் சேத்தன் சர்மா உளறிக்கொட்டிய சில விஷயங்களில் முக்கியமானது இந்திய வீரர்கள் வெறும் 80% உடல் தகுதியோடு இருக்கும் போதே ஊசி போடுகிறார்கள்தான். இது ஊக்கமருந்து உண்ணும் விசயத்திற்கு உட்பட்டது. சேத்தன் சர்மா உறுதி செய்யப்பட்டால் ஒட்டுமொத்த இந்திய வீரரும் குறிப்பிட்ட தடையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.