யாருக்கு முதல் தோல்வி? இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இன்று மோதல்
விளையாட்டு உலகில் முக்கிய தொடர்களில் ஒன்றான கிரிக்கெட் உலகக்கோப்பையின் (50 ஓவர்) 13-ஆவது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 வரை நடைபெறும் இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் 21-ஆவது லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இந்தியா - நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் தான் பங்கேற்ற 4 ஆட்டங்களிலும் தோல்வியை ருசிக்காமல் வெற்றியை ருசித்துள்ள நிலையில், 5-ஆவது ருசிக்கும் முனைப்பில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் களமிறங்குவதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக யாருக்கு முதல் தோல்வி என்பதை இந்த ஆட்டம் நிர்ணயிக்க உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் இந்த ஆட்டத்தை எதிர்பார்த்து வருகின்றனர்.
மழையால் ஆட்டம் தடைபடலாம்
இயற்கை எழில் கொஞ்சும் இமயமலைச்சாரலில் தர்மசாலா மைதானம் உள்ளது. பனிப்பிரதேசமான இங்கு வெயில் அடிப்பது கிட்டத்தட்ட மிகவும் அரிதான நிகழ்வு ஆகும். இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை பொழிந்து வரும் நிலையில், இந்தியா - நியூஸிலாந்து நாடுகள் மோதும் நாளான ஞாயிறன்று தர்மசாலாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
நரேந்திர மோடிக்காக உருவான மைதானம்
நன்றாக இருந்த மைதானத்தை ரூ.2,800 கோடி மதிப்பீட்டில் புனரமைத்த அதிசயம்
தற்போதைய பிரதமர் மோடி மூன்றாவது முறையாக குஜராத் முதல்வராக பதவியேற்றக் கையோடு 2009-இல் குஜராத் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்ந்தெ டுக்கப்பட்டார். அமித் ஷா துணைத் தலைவராக இருந்தார். அதே ஆண்டில் அமித் ஷா மகன் ஜெய் ஷா (தற்போதைய பிசிசிஐ செயலாளர்) அகமதாபாத் கிரிக்கெட் யூனிட் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மூவருக்கும் கிரிக்கெட் சார்பு கொஞ்சம் கூட இல்லையென்றாலும் மோடி - அமித் ஷா - ஜெய்ஷா மும்மூர்த்திகளின் உத்தரவுகள்தான் குஜராத் கிரிக்கெட் சங்க விதியாகவும் இருந்தது. 2009 இல் மோடி - அமித் ஷா - ஜெய்ஷா கூட்டணியில் சிக்கிய குஜராத் கிரிக்கெட் சங்கம் 14 ஆண்டுகளாக அவர்களது சொந்த நிறுவனம் போல் இன்றுவரை உள்ளது. மோடி பிரதமரான பிறகு 2014இல் குஜராத் கிரிக்கெட் சங்க தலைவராக அமித் ஷா பொறுப்பேற்றார். இந்த நேரத்தில், ஜெய் ஷா, அமைப்பின் குஜராத் கிரிக்கெட் சங்க இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2020இல் பிப்ரவரியில் ரூ.2,800 கோடி மதிப்பீட்டில் மைதானம் புனர மைக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடக் கத்தில் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் என பெயர் சூட்டப்பட்ட இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் நிகழ்வு கிரிக்கெட் அல்ல. பிரதமர் மோடி - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்ற “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சி ஆகும். அடுத்த ஆண்டே சர்தார் வல்லபாய் படேல் பெயர் நீக்கப்பட்டு மைதானத்துக்கு நரேந்திர மோடி என பெயர் சூட்டப்பட்டது.
எல்லாம் மோடிக்காக...
கிரிக்கெட் மைதானத்தின் தொடக்க நிகழ்வு அரசியல் நிகழ்ச்சியாக நடத்தப்பட்ட நிலையில், மைதானத்தின் தொடக்க ஆட்டமும் அரசியல் சார்ந்த நிகழ்வாகவே அரங்கேறியது. இந்த மைதானத்தின் துவக்க ஆட்டம் 2023 மார்ச் 9இல் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகும். போட்டி தொடங்குவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வந்தனர். இருவரும் தங்க ரதம் போல் வடிவமைக்கப்பட்ட கோல்ப் வண்டியில் மைதானத்தைச் சுற்ற, பாதி நிரம்பிய மைதானங்களை நோக்கி இருவரும் கை அசைத்தனர். பாஜகவினரால் நிரம்பிய மைதானம் “மோடி, மோடி” என்ற கோஷங்களை எழுப்பியது. இருவரும் மேடையில் அமர்ந்து நடன நிகழ்ச்சியை பார்த்தனர். இருநாட்டு பிரதமர்களும் அந்தந்த கேப்டன்களுக்கு தொப்பிகளை வழங்கி வீரர்களுடன் கைகுலுக்கினர்.