ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற் கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் தற்போது டி-20 ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளநேரத்தில் தற்போது நமது நாட்டில் (இலங்கை) கிரிக்கெட் தேவையா? என பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புக்குரல் எழுந்து வருகிறது. முக்கியமாக சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பாக பல்வேறு கண்டன கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இலங்கை அரசோ, அந்நாட்டு கிரிக்கெட் வாரியமோ கண்டுகொள்ளாதது போல கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது.
டி-20 தொடர் இன்று தொடக்கம்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா
இடம்: தில்லி
நேரம் : இரவு 7 மணி