games

img

விளையாட்டு - பதிலடி கொடுக்குமா இந்தியா? - இன்று கடைசி டெஸ்ட் போட்டி

பதிலடி கொடுக்குமா இந்தியா?
இன்று கடைசி டெஸ்ட் போட்டி

தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் (கடந்த வாரம் நடைபெற்றது) வெறும் 4 பந்துவீச்சாளர்களை மட்டும் களமிறக்கி இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணி பந்தாடிய நிலையில், 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி புதனன்று கேப்டவுனில் தொடங்குகிறது.  வெற்றி பெற்று அல்லது டிரா செய்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணியும், பதிலடி கொடுத்து டெஸ்ட் தொடரை டிரா செய்யும் இந்திய அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா
இடம் : நியூலாண்ட்ஸ், கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா
நேரம் : மதியம் 2:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை, சந்தா இருந்தால் மட்டுமே)

மோதல் ஏற்பட வாய்ப்பு

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் ஒருநாள், டி-20 என இரு தொடர்களில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் எவ்வித மோதலுமின்றி சமத்து பிள்ளைகளாக விளையாடினர். இதே போல டெஸ்ட் தொடரும் அகிம்சை வழியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென என்ன ஆனது என தெரியவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் கடுமையாக மோதிக்கொண்டனர். தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் வீரர் ஜேன்சன் இந்திய வீரர்கள் சிராஜ், ராகுலிடம்  நேரடியாக மோதல் போக்கை மேற்கொண்டார்.  அதே போல இந்திய வீரர் விராட்  கோலி ஆட்டமிழந்து பெவிலியன் நோக்கி சென்ற பொழுது தென் ஆப்பிரிக்க வீரர் நிகிடி (சப்ஜுட்) வேண்டும் என்றே அவரை நோக்கி கத்தினார். இதைக்கண்ட கோலி முறைத்துக் கொண்டு பெவிலியன் சென்றார். இவ்வாறு பல்வேறு சம்பவங்கள் முதல் டெஸ்ட் போட்டியில் அரங்கேறியுள்ள தால், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

புரோ கபடி 2023

விடைபெறுகிறது நொய்டா : இன்றுடன் 5-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் நிறைவு

புரோ கபடி தொடரின் 5-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான நொய்டாவில் நடைபெற்று வரும் நிலையில், இந்த 5-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் புதனன்றுடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து 6-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வெள்ளியன்று முதல் நடைபெறுகிறது.

ஹரியானா - ஜெய்ப்பூர்
(54-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி

உத்தரப்பிரதேசம் - புனே
(55-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி

பிரிஸ்பேன் டென்னிஸ் : முன்னணி நட்சத்திரங்கள் அவுட்

டென்னிஸ் உலகின் முக்கிய தொடர்களில் ஒன்றான பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரின் (ஆஸ்திரேலியா) மகளிர் ஒற்றையர் பிரிவு 2-ஆவது சுற்று ஆட்டத்தில் அதிரடிக்கு பெயர் பெற்ற அமெரிக்க வீராங்கனையும் உலகத் தரவரிசையில் 14-ஆவது இடத்தில் இருக்கும் சோபியா ஹெனினை, தரவரிசையில் இல்லாத ஆஸ்திரேலியாவின் ரொடியோநோவா  7-5, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இதே போல ஆடவர் ஒற்றையர் பிரி வில் உலகத் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோர்டா, 6-ஆவது இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் ஆகியோரும் தரவரிசையில் இல்லாத வீரர்களும் வீழ்ந்து வெளியேறினர்.