ரிஷப் பண்ட் விபத்து குறித்து இதுதான் உண்மையானது என எந்த அடிப்படை காரணங்களும் காவல்துறை விசாரணையில் இதுவரை வெளியாகவில்லை. பண்ட் தூங்கியிருக்கலாம், கார் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம், பனி மூட்டம் காரணமாக சென்டர் மீடியனில் மோதியிருக்கலாம் என 3 விசாரணை தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் உத்தரகண்ட் பாஜக முதல்வர் புஷ்கர் தாமி, “சாலையில் கருப்பாக ஏதோ ஒரு பொருள் திடீரென பள்ளம் போன்று தெரிந்ததனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம்” என கற்பனையாக மூடநம்பிக்கை சார்ந்த மர்ம பீதியை ஏற்படுத்தியுள்ளார். நாட்டின் முக்கியமான கிரிக்கெட் வீரரின் விபத்திற்கு பொறுப்பான விளக்கம் அளிக்காமல் சாலை விபத்தை ஒரு மூடநம்பிக்கை சார்ந்த பீதியை கிளப்பியிருக்கும் புஷ்கர் தாமியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.