கண்டுகொள்ளாத பிசிசிஐ இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளை யாட உள்ளது. இந்த சுற்றுப் பயணத்தின் தொடக்க நிகழ் வான டி-20 தொடர் ஜூன் 23-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் தொடங்கு வதற்கு முன் கிரிக்கெட் உலகில் இதுவரை கேள்விப் படாத வித்தியாசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்தியா - இலங்கை மகளிர் கிரிக்கெட் எந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பது யாருக்கும் இதுவரை தெரி யாது. ஏன் போட்டியை நடத்தும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கே தெரியாது என்பது தான் சுவாரஸ்யமான தகவல் ஆகும்.
என்ன பிரச்சனை
இலங்கை நாட்டில் நடை பெறும் கிரிக்கெட் ஆட்டங்க ளை ஒளிபரப்பும் ஒப்பந் தத்தை சோனி நிறுவனம் கைவசம் வைத்துள்ளது. இந்தியா - இலங்கை மகளிர் தொடரை ஒளிபரப்புவது குறித்து அந்நிறுவனம் இது வரை எவ்விதத் தகவலும் தெரிவிக்கவில்லை. விளம் பர நிகழ்வில் கூட ஒரு வார்த்தை தெரிவிக்க வில்லை. சோனி நிறுவ னத்தின் அலட்சியமான செய லால் தங்கள் நாட்டின் பெயர், தொடர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக இலங்கை கிரிக்கெட் வாரி யத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆஷ்லி டி சில்வா இந்தியா - இலங்கை தொடரை யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
கண்டுகொள்ளாத பிசிசிஐ
இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கண்டுகொள்ளா தது போல உள்ளது. இத னால் மகளிர் கிரிக்கெட்டுக்கு பிசிசிஐ முக்கியத்துவம் அளிக்கவில்லை என சமூக வலைத்தளங்களில் ரசிகர் கள் போர்க்கொடி தூக்கி யுள்ளனர். பிசிசிஐ முயற்சி செய்தால் மிக விரைவாக தொலைக்காட்சியில் காண்ப தற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். டி-20 தொடர் தொடங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், பிசிசிஐ கண்டுகொள்ளாது இருப்பது தான் சோகமான விசயம்.